February 22, 2026, 8:48 AM
26.1 C
Chennai

நவராத்ரி கேள்வி பதில் :- த்ரி ராத்திரி விரதம்

கேள்வி:- ஒன்பது நாட்களிலும் நவராத்திரி பூஜை செய்ய இயலாதவர்கள் மூன்று நாட்கள் த்ரி ராத்ரி விரதம் கடைபிடிக்கலாம் என்று கூறப்படுகிறேதே. அதை பற்றி கூறுங்கள்.

பதில்;- நவராத்ரி பூஜை மிகவும் முக்கியமானது. சிறந்த பலன்களை அளிக்கக் கூடியது. சரத் நவராத்ரி அல்லது தேவி நவராத்ரி என்பது ஒன்பது நாட்களும் பூஜை செய்து தேவியை வழிபடுவதாகும். அவ்வாறு செய்ய இயலாதவர்கள் த்ரிதியை முதல் ஏழு நாட்கள் பூஜை செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. அது சப்த ராத்திரி விரதம் எனப்படும். அதுவும் முடியாத போது பஞ்சமி முதல் தொடங்கி ஐந்து நாட்கள் பூஜை செய்யலாம். அது பஞ்ச ராத்திரி விரதம் எனப்படுகிறது. அதுவும் இயலாதவர்கள் சப்தமி அன்று தொடங்கி அஷ்டமி, நவமி மூன்று நாட்களும் பூஜை செய்யும் த்ரி ராத்திரி விரதத்தை அனுஷ்டிக்கலாம். இதுவாவது செய்து தீர வேண்டும் என்று கூறப்படுகிறது. இது கூட செய்ய இயலாதவர்கள் நவமி அன்று ஒரு நாளாவது பூஜை செய்ய வேண்டும். நவமி பூஜை மிகவும் முக்கியமானது. தசமி அன்று மட்டும் விஜய தசமி பூஜை செய்தால் நவராத்திரி பூஜை செய்த பலன் கிட்டாது. ஒன்பது நாட்களும் செய்ய இயலாதவர்கள் நவமி அன்று மட்டுமாவது கட்டாயம் பூஜை செய்ய வேண்டும். நவராத்ரி, சப்த ராத்திரி, பஞ்ச ராத்திரி, த்ரி ராத்திரி, ஏக ராத்திரி என்று இத்தனை விதங்கள் கூறப்பட்டுள்ளன.

த்ரி ராத்திரி விரதத்தின் முக்கியத்துவம் என்னவென்றால் எப்போதுமே மூன்று என்ற எண்ணிக்கைக்கு சிறப்பு உள்ளது. மூன்று முறை மூன்று வரும் போது அது ஒன்பதாகிறது. சரத் நவராத்திரியில் மூன்று முறை மூன்று வருகிறது. இதில் ஒரு மூன்றையாவது நாம் செய்ய வேண்டும்.

த்ரி சக்தி சொரூபமான தேவியை மகா காளி, மகா லட்சுமி, மகா சரஸ்வதி ரூபிணியாக பூஜிக்கிறோம். தேவியானவள் சரஸ்வதி, லட்சுமி, துர்க்கா என்றும் வர்ணிக்கப்படுகிறாள். த்ரி என்பது பிரபஞ்ச படைப்பைக் குறிக்கும் அற்புதமான பூரண எண்ணிக்கை. த்ரி கரணம் என்பது மனம், வாக்கு, செயல் என்னும் மூன்று. அதே போல் காலமும் த்ரி காலமாக உள்ளது. எனவே நம் மனம், வாக்கு, செயல் மூன்றையும் முக்காலங்களிலும் சுத்தம் செய்து நம் சங்கல்பங்கள் வெற்றி பெறுவதற்கு இந்த த்ரி ராத்திரி விரத பூஜை உபயோகப்படுகிறது.

எனவே நவராத்ரி ஒன்பது நாட்களும் பூஜிக்க இயலாதவர்கள் இறுதி மூன்று நாட்களாவது கட்டாயம் தேவியை வழிபட்டு உய்வு பெற வேண்டும் நம்
முன்னோர் விதித்துள்ளனர்.

தெலுங்கில் – டாக்டர் பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழாக்கம் – ராஜி ரகுநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories