நவராத்ரி கேள்வி பதில் :- த்ரி ராத்திரி விரதம்

கேள்வி:- ஒன்பது நாட்களிலும் நவராத்திரி பூஜை செய்ய இயலாதவர்கள் மூன்று நாட்கள் த்ரி ராத்ரி விரதம் கடைபிடிக்கலாம் என்று கூறப்படுகிறேதே. அதை பற்றி கூறுங்கள்.

பதில்;- நவராத்ரி பூஜை மிகவும் முக்கியமானது. சிறந்த பலன்களை அளிக்கக் கூடியது. சரத் நவராத்ரி அல்லது தேவி நவராத்ரி என்பது ஒன்பது நாட்களும் பூஜை செய்து தேவியை வழிபடுவதாகும். அவ்வாறு செய்ய இயலாதவர்கள் த்ரிதியை முதல் ஏழு நாட்கள் பூஜை செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. அது சப்த ராத்திரி விரதம் எனப்படும். அதுவும் முடியாத போது பஞ்சமி முதல் தொடங்கி ஐந்து நாட்கள் பூஜை செய்யலாம். அது பஞ்ச ராத்திரி விரதம் எனப்படுகிறது. அதுவும் இயலாதவர்கள் சப்தமி அன்று தொடங்கி அஷ்டமி, நவமி மூன்று நாட்களும் பூஜை செய்யும் த்ரி ராத்திரி விரதத்தை அனுஷ்டிக்கலாம். இதுவாவது செய்து தீர வேண்டும் என்று கூறப்படுகிறது. இது கூட செய்ய இயலாதவர்கள் நவமி அன்று ஒரு நாளாவது பூஜை செய்ய வேண்டும். நவமி பூஜை மிகவும் முக்கியமானது. தசமி அன்று மட்டும் விஜய தசமி பூஜை செய்தால் நவராத்திரி பூஜை செய்த பலன் கிட்டாது. ஒன்பது நாட்களும் செய்ய இயலாதவர்கள் நவமி அன்று மட்டுமாவது கட்டாயம் பூஜை செய்ய வேண்டும். நவராத்ரி, சப்த ராத்திரி, பஞ்ச ராத்திரி, த்ரி ராத்திரி, ஏக ராத்திரி என்று இத்தனை விதங்கள் கூறப்பட்டுள்ளன.

த்ரி ராத்திரி விரதத்தின் முக்கியத்துவம் என்னவென்றால் எப்போதுமே மூன்று என்ற எண்ணிக்கைக்கு சிறப்பு உள்ளது. மூன்று முறை மூன்று வரும் போது அது ஒன்பதாகிறது. சரத் நவராத்திரியில் மூன்று முறை மூன்று வருகிறது. இதில் ஒரு மூன்றையாவது நாம் செய்ய வேண்டும்.

த்ரி சக்தி சொரூபமான தேவியை மகா காளி, மகா லட்சுமி, மகா சரஸ்வதி ரூபிணியாக பூஜிக்கிறோம். தேவியானவள் சரஸ்வதி, லட்சுமி, துர்க்கா என்றும் வர்ணிக்கப்படுகிறாள். த்ரி என்பது பிரபஞ்ச படைப்பைக் குறிக்கும் அற்புதமான பூரண எண்ணிக்கை. த்ரி கரணம் என்பது மனம், வாக்கு, செயல் என்னும் மூன்று. அதே போல் காலமும் த்ரி காலமாக உள்ளது. எனவே நம் மனம், வாக்கு, செயல் மூன்றையும் முக்காலங்களிலும் சுத்தம் செய்து நம் சங்கல்பங்கள் வெற்றி பெறுவதற்கு இந்த த்ரி ராத்திரி விரத பூஜை உபயோகப்படுகிறது.

எனவே நவராத்ரி ஒன்பது நாட்களும் பூஜிக்க இயலாதவர்கள் இறுதி மூன்று நாட்களாவது கட்டாயம் தேவியை வழிபட்டு உய்வு பெற வேண்டும் நம்
முன்னோர் விதித்துள்ளனர்.

தெலுங்கில் – டாக்டர் பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழாக்கம் – ராஜி ரகுநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories