செங்கோட்டை சிவன் கோயிலில் விவேகானந்தா கேந்திரா சார்பில் விளக்கு பூஜை!

senkottai temple villakku poojai - 2026

செங்கோட்டை அறம்வளர்த்தநாயகி உடனுறை குலசேகரநாதசுவாமி திருக்கோவிலில் வைத்து கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம் கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை மற்றும் மாதர் மாநாடு நடந்தது.

நிகழ்ச்சிக்கு விவேகானந்தா கேந்திர கிராம முன்னேற்ற திட்ட செயலாளா் ஐயப்பன்  தலைமைதாங்கினார். பிஎல்எம்.போர்ட்ஸ் கிளப் நிறுவனத்தலைவா் பொறியாளா் எல்எம்.முரளி, தொழிலதிபர் மோகன்படேல், முன்னாள் நகர்மன்ற உறுப்பினா் மணிமகேஸ்வரன், முன்னாள் இராணுவ வீரர் நடராஜன், ஆகியோர் முன்னிலைவகித்தனா். கேந்திர மாவட்ட பொறுப்பாளா்  கருப்பசாமி அனைரையும் வரவேற்று பேசினார்.

கேந்திர சகோதரி தெய்வானை  இறைவணக்கம் பாடினா். இலஞ்சி விவேகானந்தா கேந்திர பாலா் பள்ளி  மாணவியா்களின் கலைநிகழ்ச்சி தனித்திறன் சமய உரையாற்றினா்.

சாம்பவர்வடகரை சமய வகுப்பு மாணவி வரவேற்பு நடனம் ஆடினார். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக குற்றாலம் ஐந்தருவி ஸ்ரீசாரதா ஆஸ்மர நிர்வாகி யதீஸ்வரிஆத்மப்ரியா அம்பாள், ஆசியுரை வழங்கினார். பின்னா்  யதீஸ்வரி ஆத்மப்ரியா அம்பாள், ரமீலாமோகன்படேல், செண்பகவல்லிமாடசாமி, மல்லிகாவேல்சாமி, முத்துமாரிலெட்சுமணன் ஆகியோர் முதல் குத்துவிளக்கினை ஏற்றி பூஜையை துவக்கி வைத்தனா்.

திருவிளக்கு பூஜையினை கேந்திர சகோதரிகள் சந்திரா, சரஸ்வதி, ஆகியோர் நடத்தினர். பூஜையில் செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு சுவாமி, அம்பாள் தரிசனம் பெற்று சென்றனா்.

முன்னதாக சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் மற்றும் நன்கொடையாளர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சமுதாய பெரியோர்கள், ஆன்மீக அன்பர்கள், சமூக ஆர்வலா்கள் விவேகானந்தா கேந்திர தொண்டர்கள், தன்னார்வலா்கள், ஆயுள்கால உறுப்பினா்கள் தொண்டர்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் கேந்திர மருத்துவமனை உதவியாளா் கண்ணன் நன்றி கூறினார். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories