December 5, 2025, 12:35 PM
26.9 C
Chennai

செங்கோட்டை சிவன் கோயிலில் விவேகானந்தா கேந்திரா சார்பில் விளக்கு பூஜை!

senkottai temple villakku poojai - 2025

செங்கோட்டை அறம்வளர்த்தநாயகி உடனுறை குலசேகரநாதசுவாமி திருக்கோவிலில் வைத்து கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம் கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை மற்றும் மாதர் மாநாடு நடந்தது.

நிகழ்ச்சிக்கு விவேகானந்தா கேந்திர கிராம முன்னேற்ற திட்ட செயலாளா் ஐயப்பன்  தலைமைதாங்கினார். பிஎல்எம்.போர்ட்ஸ் கிளப் நிறுவனத்தலைவா் பொறியாளா் எல்எம்.முரளி, தொழிலதிபர் மோகன்படேல், முன்னாள் நகர்மன்ற உறுப்பினா் மணிமகேஸ்வரன், முன்னாள் இராணுவ வீரர் நடராஜன், ஆகியோர் முன்னிலைவகித்தனா். கேந்திர மாவட்ட பொறுப்பாளா்  கருப்பசாமி அனைரையும் வரவேற்று பேசினார்.

கேந்திர சகோதரி தெய்வானை  இறைவணக்கம் பாடினா். இலஞ்சி விவேகானந்தா கேந்திர பாலா் பள்ளி  மாணவியா்களின் கலைநிகழ்ச்சி தனித்திறன் சமய உரையாற்றினா்.

சாம்பவர்வடகரை சமய வகுப்பு மாணவி வரவேற்பு நடனம் ஆடினார். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக குற்றாலம் ஐந்தருவி ஸ்ரீசாரதா ஆஸ்மர நிர்வாகி யதீஸ்வரிஆத்மப்ரியா அம்பாள், ஆசியுரை வழங்கினார். பின்னா்  யதீஸ்வரி ஆத்மப்ரியா அம்பாள், ரமீலாமோகன்படேல், செண்பகவல்லிமாடசாமி, மல்லிகாவேல்சாமி, முத்துமாரிலெட்சுமணன் ஆகியோர் முதல் குத்துவிளக்கினை ஏற்றி பூஜையை துவக்கி வைத்தனா்.

திருவிளக்கு பூஜையினை கேந்திர சகோதரிகள் சந்திரா, சரஸ்வதி, ஆகியோர் நடத்தினர். பூஜையில் செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு சுவாமி, அம்பாள் தரிசனம் பெற்று சென்றனா்.

முன்னதாக சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் மற்றும் நன்கொடையாளர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சமுதாய பெரியோர்கள், ஆன்மீக அன்பர்கள், சமூக ஆர்வலா்கள் விவேகானந்தா கேந்திர தொண்டர்கள், தன்னார்வலா்கள், ஆயுள்கால உறுப்பினா்கள் தொண்டர்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் கேந்திர மருத்துவமனை உதவியாளா் கண்ணன் நன்றி கூறினார். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories