திருச்செந்துார் கோவிலில், புதிய தரிசன முறையால் பக்தர்கள் அவதி..

திருச்செந்துார் முருகன் கோவிலில், புதிய தரிசன முறையால் பக்தர்கள் குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் ஏழு மணி நேரம்வரை கால்கடுக்க நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இந்த முறையை மாற்றி கொள்ள பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.பக்தர்களின் காணிக்கை மூலம் பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஆனால், பக்தர்களுக்கு போதிய வசதிகள், சுகாதார வசதிகள் இக்கோவிலில் இல்லை என்ற
குற்றச்சாட்டு உள்ளது.இரண்டு மாதங்களாக தரிசன முறையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் தர்ம தரிசன முறை மட்டும் அமலில் உள்ளது. சுவாமியை தரிசனம் செய்ய தர்ம தரிசனம், கட்டண தரிசனம் என, இரு வரிசைகளில் பக்தர்கள் செல்ல வேண்டும்.இறுதியாக இரண்டு வரிசைகளும் சேர்ந்து, ஒரே வரிசையாக சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். இவ்வாறு சுவாமி தரிசனம் செய்ய ஐந்து முதல் ஏழு மணி நேரம் வரை ஆகிறது.
அது வரை குழந்தைகள், பெரியவர்கள், முதியோர் என, அனைவரும் வரிசையில் கால்கடுக்க காத்திருக்க வேண்டியுள்ளது.

முன்பு இதுபோன்ற நிலை இல்லை. தற்போது தான் சுவாமியை தரிசிக்க இவ்வளவு நேரம் ஆகிறது என, பக்தர்களிடம் குற்றச்சாட்டு உள்ளது.
இயற்கை உபாதைகளுக்கும், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் வரிசையில் இருந்து வெளியில் செல்வதற்கு பாதைகள் இல்லை. இதனால், பலர் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
புதிய தரிசன முறையால் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து பல புகார்கள் வந்த போதிலும், கோவில் நிர்வாகம் இதை கண்டுகொள்ளவில்லை.புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இணை ஆணையர் பக்தர்களின் குறைகளை போக்கவும், விரைவில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

images 2022 05 17T111106.483 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Entertainment News

Popular Categories