திருச்செந்துார் கோவிலில், புதிய தரிசன முறையால் பக்தர்கள் அவதி..

திருச்செந்துார் முருகன் கோவிலில், புதிய தரிசன முறையால் பக்தர்கள் குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் ஏழு மணி நேரம்வரை கால்கடுக்க நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இந்த முறையை மாற்றி கொள்ள பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.பக்தர்களின் காணிக்கை மூலம் பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஆனால், பக்தர்களுக்கு போதிய வசதிகள், சுகாதார வசதிகள் இக்கோவிலில் இல்லை என்ற
குற்றச்சாட்டு உள்ளது.இரண்டு மாதங்களாக தரிசன முறையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் தர்ம தரிசன முறை மட்டும் அமலில் உள்ளது. சுவாமியை தரிசனம் செய்ய தர்ம தரிசனம், கட்டண தரிசனம் என, இரு வரிசைகளில் பக்தர்கள் செல்ல வேண்டும்.இறுதியாக இரண்டு வரிசைகளும் சேர்ந்து, ஒரே வரிசையாக சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். இவ்வாறு சுவாமி தரிசனம் செய்ய ஐந்து முதல் ஏழு மணி நேரம் வரை ஆகிறது.
அது வரை குழந்தைகள், பெரியவர்கள், முதியோர் என, அனைவரும் வரிசையில் கால்கடுக்க காத்திருக்க வேண்டியுள்ளது.

முன்பு இதுபோன்ற நிலை இல்லை. தற்போது தான் சுவாமியை தரிசிக்க இவ்வளவு நேரம் ஆகிறது என, பக்தர்களிடம் குற்றச்சாட்டு உள்ளது.
இயற்கை உபாதைகளுக்கும், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் வரிசையில் இருந்து வெளியில் செல்வதற்கு பாதைகள் இல்லை. இதனால், பலர் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
புதிய தரிசன முறையால் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து பல புகார்கள் வந்த போதிலும், கோவில் நிர்வாகம் இதை கண்டுகொள்ளவில்லை.புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இணை ஆணையர் பக்தர்களின் குறைகளை போக்கவும், விரைவில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

images 2022 05 17T111106.483 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories