திருப்பாவை – பாசுரம் 18 (உந்து மதகளிற்றன்)

thiruppavai pasuram 18 - 2026

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடைதிறவாய்
வந்துஎங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார்விரலி உன்மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளைஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

thiruppavai 18 720x486 1 - 2026

விளக்கம்:
முந்தைய பாசுரத்தில் நந்தகோபரின் திருமாளிகையுள் புகுந்து, நந்தகோபர், யசோதை, கண்ணன், பலராமன் ஆகியோரைத் துயில் எழுப்பும் இடைப் பெண்கள், கண்ணன் எழாதது கண்டு, இந்தப் பாசுரத்தில் கண்ணனை எழுப்புமாறு நப்பின்னையை கதவு திறந்து வெளிவரச் சொல்கிறார்கள்.

தன்னால் வென்று வீழ்த்தப்படும் மத யானைகளை உடையவன் நந்தகோபாலன். போர்க்களத்தில் புறமுதுகு காட்டி ஓடாத தோள் வலிமையைக் கொண்டவன். அத்தகைய நந்தகோபாலனுக்கு மருமகள் ஆனவளே. ஓ நப்பின்னைப் பிராட்டியே. பரிமள மணம் கமகமவென வீசும் கூந்தலை உடையவளே. நீ இந்தக் கதவின் தாழ்ப்பாளைத் திறந்துவிடு.

அதிகாலைப் பொழுதில் கோழிகள் எங்கும் நிறைந்து விடியலை உணர்த்திக் கூவுகின்றனவே. நீ அதனைக் கேட்டாயோ? மேலும், குருக்கத்திக் கொடிகளால் ஆகிய பந்தலின் மேல் உறங்கும் குயில் கூட்டங்கள், பல முறை கூவிக் கிடப்பதைக் கண்டாயோ? அந்தக் கண்ணபிரானோடு விளையாடுவதற்குக் கருவியான பந்தினைத் தாங்கிக் கொண்டிருக்கும் விரல்களைக் கொண்டவளே. உன் கணவனான கண்ணபிரானின் திருநாமங்களை நாங்கள் பாடவேண்டும்.

அதற்கு வசதியாக, சீர்மை பொருந்திய உன் கை வளையல்கள் ஒலிக்கும்படி நடந்துவந்து, தாமரைப் பூப் போன்ற உன் கையினால் எங்கள் மீது மகிழ்ச்சி கொண்டு தாழ்ப்பாளைத் திறந்துவிடு என்று தோழியரை முன்னிட்டுக் கொண்டு பாடுகிறார் ஆண்டாள்.

தன்னைப் பற்றுவதற்கு, வாசல்காப்பானையும் நந்தகோபரையும் பலராமனையும் இறைஞ்சுவதால் என்ன பயன் என்று கண்ணன் வாளாவிருந்தானோ எனக் கருதிய இடைப் பெண்கள், பிராட்டியின் கருணை அன்றோ வேண்டும் என்றவாறு நப்பின்னையைத் துயில் எழுப்பினார்கள் இந்தப் பாசுரத்தில்.

கண்ணபிரானை நந்தகோபன் குமரன் என்று அவரது தொடர்பைச் சொல்லி அழைத்த இடைப் பெண்கள், நப்பின்னையையும் நந்தகோபாலன் மருமகளே! என்றனர். புகுந்த வீட்டை மேன்மேலும் சிறக்கச் செய்வதால், பிறந்த வீட்டின் பெருமையைச் சொல்லாது நந்தகோபாலன் மருமகளே என நப்பின்னையை விளித்தார் ஸ்ரீஆண்டாள்.!

  • செங்கோட்டை ஸ்ரீராம்

இந்தக் கட்டுரைகளையும் படிக்க…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories