T20 WC 2022: அரையிறுதிக்கு செல்லப் போகும் அணிகள்

t20wc - 2026

உலகக் கோப்பை டி20 போட்டிகள் – பதினெட்டாம் நாள் – 2.11.2022

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

இன்று குரூப் 2 பிரிவில் ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் ஜிம்பாபே நெதர்லாந்து அணியை எதிர்த்து விளையாடியது. இரண்டாவது ஆட்டத்தில் இந்திய, வங்கதேச அணிகளும், சற்று நேரம் மழையும் விளையாடியது.

முதல் ஆட்டம் ஜிம்பாபே-நெதர்லாந்து
ஜிம்பாபே அணியை (19.2 ஓவரில் 117 ரன், சீன் வில்லியம்ஸ் 28, சிக்கந்தர் ராசா 40, மீகிரன்3/29) நெதர்லாந்து அணி (18 ஓவரில் ஐந்து விக்கட் இழப்பிற்கு 120 ரன், மேக்ஸ் ஓ டவுட் 52, டாம் கூப்பர் 32) ஐந்து விக்கட் வித்தியாசத்தில் வென்றது.


இந்த விளையாட்டு எப்படி இருக்கப் போகிறது என்பது பற்றி அனைவரும் ஆர்வமாக இருந்தார்கள். ஏனென்றால் இதற்கடுத்து இதே மைதானத்தில் இந்தியா, வங்கதேச அணிகளின் ஆட்டம் இருந்தது. எனவே மைதானம் பேட்டிங்கிற்குச் சாதகமா? இல்லை பந்துவீச்சிற்கு சாதகமா? சுழப்பந்துவீச்சிற்கா? இல்லை வேகப் பந்துவீச்சிற்கா? என பல கேள்விகள் இருந்தன. ஆனால் இந்த ஆட்டம் ரொம்ப சுமார் ரகமாக இருந்தது.

இந்தக் கேள்விகள் எதற்கும் பதில் சொல்லும் ஆட்டமாக இருக்கவில்லை.


ஜிம்பாபே அணியில் இரண்டு பேட்டர்கள் இரட்டை இலக்க ரன்களை எடுத்தார்கள். மீதமுள்ளவர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தார்கள். நெதர்லாந்து அணியின் பந்துவீச்சாளர்களும் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை.

ALSO READ:  ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

அதற்கடுத்து ஆடவந்த நெதர்லாந்து அணியிலும் இரண்டு பேட்டர்கள் மட்டுமே சொல்லிக் கொள்ளும்படி ஆடினார்கள். ஜிம்பாபே அணியின் ஸ்கோரான 117 என்பது மிகக்குறைவு என்பதால் நெதர்லாந்து அணி 18 ஓவரில் 120 ரன் எடுத்து வெற்றி பெற்றது.


இந்த வெற்றி ஜிம்பாபே, நெதர்லாந்து இரண்டு அணிகளும் அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை குறைத்துள்ளது. ஒருவேளை ஜிம்பாபே அணி வெற்றி பெற்றிருந்தால் அந்த அணிக்கு ஒரு வாய்ப்பி கிடைத்திருக்கலாம்.


இரண்டாவது ஆட்டம், இந்தியா-வங்கதேசம்

இந்திய அணி (184/6, கே.எல்.ராகுல் 50, விராட் கோலி 64, சூர்யகுமார் யாதவ் 30, அஷ்வின் 13, ஹசன் மஹ்முத் 3/47) வங்கதேச அணியை (16 ஓவரில் ஆறு விக்கட் இழப்பிற்கு 145 ரன், லிட்டன் தாஸ் 60, நஜ்முல் 21, நூருல் ஹசன் 25, அர்ஷதீப், ஹார்திக் பாண்ட்யா தலா 2 விக்கட்) டக்வொர்த்-லூயிஸ் முறைப்படி ஐந்து ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் இந்திய அணியை மட்டையாடச் சொன்னது. நாலாவது ஓவரில் ரோஹித் சர்மா, 2 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் இன்று அதிரடியாக ஆடினார். 32 பந்துகளில் 50 ரன் எடுத்து 9.ச் ஓவரில் ஆட்டமிழந்தார்.

தொடக்கத்தில் சற்று மெதுவாக ஆடிய விராட் கோலி பின்னர் வேகமாக ரன் சேர்த்தார். அதைவிட முக்கியமாக கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சூர்யகுமார் யாதவ் 16 பந்துகளில் 30 ரன் சேர்த்தார். ஹார்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல் ஆகியோ இன்றும் சரியாக ஆடவில்லை. அஷ்வின் 6 பந்துகளில் 13 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 184 ரன் எடுத்திருந்தது.


இது ஒரு நல்ல ஸ்கோர். வங்கதேச அணி இதனை அடைய மிகவும் கஷ்டப்படும் என்று நினைத்திருந்த வேளையில் வங்கதேச அணியின் லிட்டன் தாஸும் மழையும் இந்தியர்களின் வயிற்றில் புளியைக் கரைத்தன.

லிட்டன்தாசின் 56 ரன்னால் வங்கதேச அணி பவர்ப்ளே முடிவில் விக்கட் இழப்பின்றி 60 ரன் எடுத்திருந்தது. அடுத்த ஓவர் முடிவில் மழை குறுக்கிட்டது. ஆனால் ஒரு சில நிமிட நேர மழைக்குப் பின்னர், அரை மணி நேர தடைக்குப் பின்னர் ஆட்டம் மீண்டும் தொடங்கியது.

அப்போது வங்கதேச அணி 16 ஓவரில் 151 ரன் எடுக்க வேண்டும் என டக்வொர்த்-லூயிஸ் முறைப்படி முடிவு செய்யப்பட்டது.
மீண்டும் ஆட்டம் தொடங்கிய பின்னர் அஷ்வின் வீசிய முதல் ஓவரில் கே.எல்.ராகுல் வீசிய ஒரு த்ரோவால் லிட்டன்தாஸ் ரன் அவுட் ஆனார். லிட்டன்தாஸ் இரண்டாவது ரன்னுக்காக ஓடியபோது வழுக்கி விழுந்தார்.

ALSO READ:  'தாமரை வாக்குறுதிகள்' என்ற பெயரில் பாஜக., தேர்தல் அறிக்கை வெளியீடு!

12ஆவது ஓவரில் அர்ஷதீப் இரண்டு விக்கட்டுகளையும், 13ஆவது ஓவரில் ஹார்திக் பாண்ட்யா இரண்டு விக்கட்டுகளையும் எடுத்தனர். அந்த சமயத்தில் 18 பந்துகளில் 43 ரன் எடுக்கவேண்டியிருந்தது. வங்கதேச அணியால் அதனை எடுக்க முடியவில்லை. எனவே இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.


இந்த வெற்றியால் இந்திய அணி 6 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அடுத்த ஆட்டத்தில் இந்திய அணி ஜிம்பாபே அணியை சந்திக்க உள்ளது. இந்தியா அரையிறுதிப் போட்டியில் விளையாடுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது எனச் சொல்லலாம்.

நாளை நடக்கவுள்ள தென் ஆப்பிரிக்கா பாகிஸ்தான் ஆட்டத்தில்

தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றால் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்குச் செல்வது உறுதியாகிவிடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories