IND Vs AUS 4th Test: டிராவில் முடிந்த போட்டி!

ind vs aus test series - 2026

இந்தியா ஆஸ்திரேலியா நான்காவது டெஸ்ட், அகமதாபாத், ஐந்தாம் நாள், 13.03.2023
–முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

அகமதாபாத்தில் நடக்கும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்க்ஸ் 167.2 ஓவர்கள் விளையாடி 480 ரன்னிற்கு ஆல் அவுட் (உஸ்மான் க்வாஜா 180, கிரீன் 114, மர்ஃபி 41, ஸ்மித் 38, நாதன் லியன் 34, ஹெட் 32, அஷ்வின் 6/91, ஷமி 2/134, ஜதேஜா 1/49, அக்சர் படேல் 1/47). இரண்டாவது இன்னிங்க்ஸில் 78.1 ஓவர் விளையாடி இரண்டு விக்கட் இழப்பிற்கு 175 ரன்னிற்கு ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.

இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 178.5 ஓவர்கள் விளையாடி 571 ரன்னுக்கு ஆல் அவுட் (கோலி 186, கில் 128, அக்சர் படேல் 79, ஜதேஜா 44, புஜாரா 42, ரோஹித 35, லியன் 3/151, மர்பி 3/113, ஸ்டார்க் 1/97).

தங்கள் அணி தோற்றுப் போனதால் முதல் இரண்டு டெஸ்டுகளின் ஆட்டக்களத்தை ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் பலர் குறை சொன்னார்கள். மூன்றாவது டெஸ்டில், இந்தூர் ஆட்டக்களமும் முதலிரண்டு மைதானங்களின் ஆட்டக்களம் போலத்தான் இருந்தது. இருப்பினும் ஆஸ்திரேலியா வென்றதால் பெரிய விமர்சனம் எழவில்லை. அகமதாபாத் ஆட்டக்களம் பந்துவீச்சாளர்களுக்கு எந்த வித உதவியும் செய்யவில்லை. இரண்டு அணிகளும் இன்னும் ஐந்து நாட்களுக்குக் கூட ஆடியிருப்பார்கள். அப்படி ஒரு உயிரற்ற ஆட்டக்களம். இதற்கு விமர்சகர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் எனத் தெரியவில்லை.

இன்று காலை முதல் மதியம் 1520 வரை விளையாடி ஆஸ்திரேலிய அணி இரண்டு விக்கட் இழப்பிற்கு 175 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி தாங்கள் மேலும் ஆட விரும்பவில்லை எனத் தெரிவித்ததால் ஆட்டம் அப்போதே முடித்து வைக்கப்பட்டது. ஆட்டம் ட்ராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றது. ஆட்ட நாயகனாக விராட் கோலி அறிவிக்கப்பட்டார். தொடர் நாயகன்களாக அஷ்வினும் ஜதேஜாவும் அறிவிக்கப்பட்டனர்.

இந்திய அணி இந்தப்போட்டியிலும் வென்றால் உலகக்கோப்பை டெஸ்ட் பொட்டியில் விளையாடத் தகுதி பெறும் என்ற நிலையில் இருந்தது. ஆஸ்திரேலிய அணி இதற்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது. ஆனால் மதியம் இரண்டு மணி போல நியூசிலாந்து இலங்கை அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதாக செய்தி வந்துவிட்டது.

இலங்கை அணி வெற்றி பெற்றிருந்தால் இந்தியா உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்குச் செல்வதில் சந்தேகம் அடுத்த நியூசிலாந்து இலங்கை போட்டியின் முடிவு வரை நீடித்திருக்கும். ஆனால் இலங்கை இன்று தோற்றதால் இந்தியா இறுதிப் போட்டிக்குச் செல்கிறது.

இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகின்ற ஜூன் 7ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 15:30க்குத் தொடங்கும். அதாவது ஐபிஎல் போட்டிகளின் ஃபைனல் முடிவடைந்த பிறகு போட்டி நடக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories