December 6, 2025, 3:33 PM
29.4 C
Chennai

IPL 2024: அதிரடி காட்டிய கோல்கத்தா அணி!

ipl 2024 - 2025
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஐபிஎல் 2024 – 29.03.2024 – பெங்களூரு
ராயல் சேலஞ்சர்ஸ் vs கொல்கொத்த நைட் ரைடர்ஸ்

பெங்களூரு அணியை (182/6, விராட் கோலி 83*, கிரீன் 33, மேக்ஸ்வெல் 28, தினேஷ் கார்த்திக் 20, ஹர்ஷித் ராணா 2/39, ரசல் 2/29) கொல்கொத்தா அணி (வெங்கடேஷ் ஐயர் 50, சுனில் நரேன் 47, ஷ்ரேயாஸ் ஐயர் 39*, பில் சால்ட் 30,  ) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும்  கொல்கொத்த நைட் ரைடர்ஸ் அணிக்கும் பெங்களூருவில் ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற கொல்கொத்தா அணி முதலில் பந்து வீசத்தீர்மானித்தது. பெங்களூரு அணியின் தொடக்க வீரர் கிங் கோலி அபாரமாக ஆடினார். அவர் 59 பந்துகளில் 83 ரன் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 4 ஃபோர் மற்றும் 4 சிக்சர் அடித்தார்.

மற்றொரு தொடக்க வீரர் பிளேசிஸ் இந்த ஆட்டத்திலு சோபிக்கவில்லை. காமரூன் கிரீன் (21 பந்துகளில் 33 ரன்) மற்றும் கிளன் மேக்ஸ்வெல் (19 பந்துகளில் 28 ரன்) நிலைத்து ஆடவில்லை. ரஜத் படிதர் (3 ரன்) அனுஜ் ராவத் (3 ரன்) இருவரும் ஏமாற்றினார்கள். ஏறத்தாழ விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட தினேஷ் கார்த்திக் 8 ஓந்துகளில் 20 ரன் அடித்தார். அதில் 3 சிக்சர்களும் அடங்கும். இதனால் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் ஆறு விக்கட் இழப்பிற்கு 182 ரன் எடுத்தது.

          இரண்டாவதாக ஆட வந்த கொல்கொத்தா அணியின் பேட்டிங் ஆரம்பத்திலிருந்தே அதகளமாக இருந்தது. 22 பந்துகளில் 2 ஃபோர், 5 சிக்சர்களுடன் 47 ரன் அடித்த சுனில் நரேன் முதலில் அவுட்டானார். அதன் பின்னர் உடனேயே சால்ட் (20 பந்துகளில் 30 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) ஆட்டமிழந்தார்.

உண்மையில் கொல்கொத்தா அணியின் முதல் ஆறு ஓவர்களில் அந்த அணியின் வெற்றி உறுதியாகிவிட்டது. அந்த அணி முதல் ஆறு ஓவரில் விக்கட் இழப்பின்றி 85 ரன் எடுத்தது. ரன்ரேட் 14.16; தேவயான ரன்ரேட் 7.0; அதாவது மீதமுள்ள 84 பந்துகளில் 98 ரன் எடுக்கவேண்டும்.

          இவர்களுக்குப் பதிலாக ஆடவந்த வெங்கடேஷ் ஐயரும் (30 பந்துகளில் 50 ரன், 3ஃபோர், 4 சிக்சர்) ஷ்ரேயாஸ் ஐயரும் (24 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 39 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) அவர்கள் விட்ட இடத்திலிருந்து அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

இதனால் கொல்கொத்தா அணி 16.5 ஓவரில் இலக்கை எளிதாக எட்டினர். பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்கள் மைதானத்தின் தன்மை அறிந்து அதற்குத் தகுந்தார்போல பந்துவீசவில்லை.  

          கொல்கொத்தா அணியின் சுனில் நரேன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை லக்னோவில் பஞ்சாப் அணிக்கும் லக்னோ அணிக்கும் இடையில் ஆட்டம் நடைபெற உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories