IND Vs AUS Test: ஸ்கோரை தூக்கி நிறுத்திய இந்திய தொடக்க வீரர்கள்!

aus vs india - 2026
#image_title

இந்தியா ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் – இரண்டாம் நாள் – பெர்த்-23.11.2024– இந்திய அணியின் தொடக்க வீரர்கள் அதிரடி ஆட்டம்

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இந்திய அணி முதல்இன்னிங்க்ஸில் 49.4 ஓவர்களில் 150 ரன் (நிதீஷ் குமார் ரெட்டி 41, ரிஷப் பந்த் 37, கே.எல்.ராகுல் 26, ஹேசல்வுட் 4/29, மிட்சல் ஸ்டார்க் 2/14, பேட் கம்மின்ஸ் 2/67, மிட்சல் மார்ஷ்2/12); இரண்டாவது இன்னிங்க்சில் விக்கட் இழப்பின்றி 57 ஓவர்களில் 172 ரன்; ஆஸ்திரேலியஅணி முதல் இன்னிங்க்ஸில் 51.2 ஓவர்களில் 104 (அலெக்ஸ் கேரி 21, மிட்சல் ஸ்டார்க்26, ட்ராவிஸ் ஹெட் 11, நாதன் மெக்ஸ்வீனி 10, பும்ரா 5/30, சிராஜ் 2/20, ஹர்ஷித் ராணா3/48). இந்திய அணி 218 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

          நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 27 ஓவர்களில்67/7 என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தை முடித்திருந்தது. இன்று பும்ராவின் முதல்ஓவர் முதல் பந்தில் அலக்ஸ் கேரி ஆட்டமிழந்தார். இன்றைய ஏழாவது ஓவரில் அதாவது33.2 ஆவது ஓவரில் நாதன் லியன் (5 ரன்) ஹர்ஷித் ராணா பந்தில் ஆட்டமிழந்தார்.அதன் பின்னர் ஸ்டார்க் மற்றும் ஹேசல்வுட் இருவரும் 17ஓவர்கள் ஆடினர்;25 ரன்கள் சேர்த்தனர். இந்திய வேகப் பந்துவீச்சாளர்களின் பந்துகளில் அவர்களால் ரன்அதிகம் அடிக்க முடியவில்லை. 46 ரன்கள் லீடோடு இந்திய அணி இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடவந்தது.

          இரண்டாவது இன்னிங்க்ஸில் பிளேயிங் கண்டிசனுக்குஅப்ளை பண்ணி டெக்னிக்கலி சவுண்டா இந்திய டெஸ்ட் பேட்டிங், ரொம்ப நாள் கழிச்சு இன்றுபாக்க கிடைத்தது. ஆரம்பம்முதல் கடைசி வரை ஒரே மனநிலையில்பயணிப்பது கேஎல்.ராகுலின் சிறப்பு என்றால், திடீரென கியரை மாற்றுவதும் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதும்என பந்துவீச்சாளர்களை குழப்பத்தில் வைத்திருப்பது ஜெய்ஸ்வாலின் சிறப்பு.

          பும்ரா இழுத்து வந்ததேரை ஏறக்குறைய இந்தியத் தொடக்க வீரர்கள் நிலைக்குப்பக்கத்தில் கொண்டு வந்து விட்டார்கள். யஸஷ்வி ஜெய்ஸ்வால் (193 பந்துகள், 7 ஃபோர், 2 சிக்சர்,90 ரன்) மற்றும் கே.எல். ராகுல் (153 பந்துகள், 4 ஃபோர், 62 ரன்) இருவரும் ஒருடெஸ்ட் மேட்சை எப்படி ஆடவேண்டுமோ அப்படி ஆடினார்கள். நாளை இரு சதம் அடித்து, அடுத்துகோலி, படிக்கல், பந்த் மூவரும் அரை சதம் அடித்தார்கள் என்றால் இந்திய அணியின் வெற்றியையாராலும் தடுக்க முடியாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories