IPL 2025: பந்து வீச்சாளர்களுக்கு வலு சேர்த்த போட்டி!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – பெங்களூரு vs பஞ்சாப் சின்னசாமி மைதானம், பெங்களூரு – 18.04.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை (14 ஓவர்களில் 95/9,  டிம் டேவிட் 50, ரஜத் படிதர் 23, அர்ஷதீப் சிங் 2/23, மார்கோ ஜேன்சன் 2/10, சாஹல் 2/11, ஹர்பிரீத் ப்ரார் 2/25, சேவியர் பார்லெட் 1/26) பஞ்சாப் கிங்க்ஸ் அணி (12.1 ஓவர்களில் 98/5, நெஹல் வதேரா ஆட்டமிழக்காமல் 33, பிரியன்ஸ் ஆர்யா 16, ஜோஷ் இங்கிகிஷ் 14, பிரப்சிம்ரன் சிங் 13, ஜோஷ் ஹேசல்வுட் 3/14, புவனேஷ்குமார் 2/26) 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பெங்களூருவில் மழை காரணமாக ஆட்டம் தாமதமாகத் தொடங்கியது. இழந்த நேரம் காரணமாக ஆட்டம் 14 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது, பூவாதலையா வென்ற பஞ்சாப் கிங்க்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் முதலில் ஆடவந்த பெங்களூரு அணியில் ரஜத் படிதர் (18 பந்துகளில் 23 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் டிம் டேவிட் (26 பந்துகளில் 50 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்) ஆகியோரைத் தவிர மற்ற மட்டையாளர்கள் சரியாக ஆடவில்லை. எனவே 14 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கட் இழப்பிற்கு 95 ரன் எடுத்தது.

          14 ஓவரில் 96 ரன் என்ற வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாக ஆடவந்த பஞ்சாப் அணியும் அடிக்கடி தனது விக்கட்டுகளை இழந்து வந்தது. பிரியன்ஷ் ஆர்யா (11 பந்துகளில் 16 ரன்), பிரப்சிம்ரன் சிங் (9 பந்துகளில் 13 ரன்), ஷ்ரேயாஸ் ஐயர் (10 பந்துகளில் 7 ரன்), ஜோஷ் இங்க்லிஷ் (17 பந்துகளில் 14 ரன்) ஆகியோர் ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க முடியவில்லை.

ஆனால் நெஹல் வதேரா (19 பந்துகளில் 33 ரன், 3 ஃபோர், 3 சிக்சர்) அதிரடியாகவும் இறுதிவரையும் ஆடி 12.1 ஓவர்களில் பஞ்சாப் அணிக்கு 5 விக்கட் இழப்பிற்கு 98 ரன் சேர்த்து வெற்றியைத் தேடித்தந்தார்.

          பெங்களூரு அணிக்காக 50 ரன் அடித்த அந்த அணியின் மட்டையாளர் டிம் டேவிட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories