IPL 2025: பந்துகளை பஞ்சாய் பறக்கவிட்ட பஞ்சாப் அணிம!

ipl 2025 games - 2026

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஐ.பி.எல் 2025 – பஞ்சாப் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ் மைதானம், கொல்கொத்தா – 26.04.2025

மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது

பஞ்சாப் கிங்க்ஸ் அணி (201/4, பிரப்சிம்ரன் சிங் 83, பிரியன்ஸ் ஆர்யா 69, ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 25, வைபவ் அரோரா 2/34, வருண் சக்ரவர்த்தி 1/39, ஆண்ட்ரூ ரசல் 1/27) கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி (ஒரு ஓவரில் 7/0) மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது. இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பெற்றன.

பூவாதலையா வென்ற பஞ்சாப் கிங்க்ஸ் அணி முதலில் மட்டையாட முடிவு செய்தது. அதன் தொடக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா (35 பந்துகளில் 69 ரன், 8 ஃபோர், 4 சிக்சர்) 11.5 ஓவர் வரை விளையாடினார்.

முதல் விக்கட்டு அவர் பிரப்சிம்ரன் சிங் (49 பந்துகளில் 83 ரன், 6 ஃபோர், 6 சிக்சர்) உடன் இணைந்து 120 ரன் சேர்த்தார். அதற்குப் பின் வந்த வீரர்கள் இவர்களின் வேகத்தில் ரன் அடிக்க முடியவில்லை. எனவே 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கட் இழப்பிற்கு 201 ரன் சேர்த்தது.

202 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கொத்தா அணி ஒரு ஓவர் மட்டுமே விளையாட முடிந்தது. அதன் பின்னர் மழை வந்துவிட்டது.

இச்சமயத்தில் மாலை/இரவு வேளைகளில் வரக்கூடிய “நார்வெஸ்டர்” என்று ஆங்கிலத்தில் அழைக்கபடுகின்ற இடிமழை இது. இதன் உக்கிரம் குறையாததால் 10.59க்கு ஆட்டம் கைவிடப்பட்டு, இரு அணிகளுக்கும் ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories