IPL 2025: போட்டி கொல்கத்தாவின் பக்கம்!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – கொல்கொத்தா vs டெல்லி –டெல்லி – 29.04.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி (204/9, அங்க்ரிஷ் ரகுவன்ஷி 44, ரிங்கு சிங் 36, சுனில் நரேன் 27, ரஹ்மானுல்லா குர்பாஸ் 26, அஹிங்க்யா ரஹானே 26, மிட்சல் ஸ்டார்க் 3/43, விப்ராஜ் நிகம் 2/41, அக்சர் படேல் 2/27) டெல்லி கேபிடல்ஸ் அணியை (190/9, டியு பிளேசிஸ் 62, அக்சர் படேல் 43, விப்ராஜ் நிகம் 38, சுனில் நரேன் 3/29, வருண் சக்ரவர்த்தி 2/39, அனுகூல் ராய், வைபவ் அரோரா, ரசல் தலா 1 விக்கட்) 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது.

அந்த அணியின் முதல் நான்கு வீரர்கள் ரஹமானுல்லா குர்பாஸ் (12 பந்துகளில் 26 ரன், 5 ஃபோர், 1சிக்சர்), சுனில் நரேன் (16 பந்துகளில் 27 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்), அஹிங்க்யா ரஹானே (14 பந்துகளில் 26 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்), அங்க்ரிஷ் ரகுவன்ஷி (32 பந்துகளில் 44 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) ஆகியோர் நல்ல் ரன்ரேட்டுடன் ரன் சேர்க்க உதவினர்.

வெங்கடேஷ் ஐயர் (7 ரன்) இன்றும் சரியாக ஆடவில்லை. அதன் பின்னர் வந்த ரிங்கு சிங் (25 பந்துகளில் 36 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) ஆண்ட்ரூ ரசல் (9 பந்துகளில் 17 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்) இருவரும் அதே ரன் ரேட்டைத் தொடர்ந்தனர்.

20ஆவது ஓவரில் மிட்சல் ஸ்டார்க் வீசிய ஓவரில் ரோமன் போவெல் (5 ரன்), அனுகூல் ராய் (பூஜ்யம் ரன்), ரசல் மூவரும் ஆட்டமிழந்தனர். இதனால் கொல்கொத்தா அனி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 205 ரன் எடுத்தது.

205 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இரண்டாவதாகக் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் போரல் (4 ரன்) முதல் ஓவரில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டியூ பிளேசிஸ் (45 பந்துகளில் 62 ரன், 7 ஃபோர், 2 சிக்சர்) 15.2ஆவது ஓவர் வரி ஆடினார். இவரைத் தவிர அக்சர் படேல் (23 பந்துகளில் 43 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் விப்ராஜ் நிகம் (19 பந்துகளில் 38 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் சிறப்பாக ஆடினார்கள்.

மற்றா வீரர்களான கே.எல். ராகுல் (7 ரன்), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (1 ரன்), அஷுத்தோஷ் ஷர்மா (7 ரன்), மிட்சல் ஸ்டார்க் (பூஜ்யம் ரன்), சமீரா ( 2 ரன்), குல்தீப் யாதவ் 1 ரன்) ஆகியோர் இன்று சரியாக விளையாடவில்லை.

கொல்கொத்தா அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் வருண், சுனில் மற்றும் ரசல் இன்று சிறப்பாக பந்துவீசி மொத்தம் 6 விக்கட்டுகள் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 190 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

அதனால் டெல்லி அணி தோல்வி அடைந்தது.

கொல்கொத்தா அணியின் தொடக்க வீரர் மற்றும் சுழல் பந்துவீச்சாளர் சுனில் நரேன் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories