IPL 2015: மும்பை அபார வெற்றி

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – மும்பை vs ராஜஸ்தான் – ஜெய்ப்பூர் – 01.05.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

மும்பை இந்தியன்ஸ் அணி (217/2, ரியன் ரிக்கிள்டன் 61, ரோஹித் ஷர்மா 53, சூர்யகுமார் யாதவ் 48, ஹார்திக் பாண்ட்யா 48, தீக்ஷணா 1/47, ரியன் பராக் 1/12) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை (16.1 ஓவர்களில் 117, ஜோஃப்ரா ஆர்ச்சர் 30, ரியன் பராக் 16, ஷுபம் துபே 15, யசஸ்வீ ஜெய்ஸ்வால் 13, துருவ் ஜுரல் 11, கர்ண் ஷர்மா 3/20, பும்ரா 2/15, போல்ட் 2/28, தீபக் சாஹர் 1/13, ஹார்திக் பாண்ட்யா 1/2 ) 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது. இன்று மும்பை அணி தொட்டதெல்லாம் பொன்.

அதன் தொடக்க வீரர்கள் ரியன் ரிக்கிள்டன் (38 பந்துகளில் 61 ரன், 7 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் ரோஹித் ஷர்மா (36 பந்துகளில் 53 ரன், 9 ஃபோர்) சிறப்பான தொடக்கம் தந்தனர்.

அவர்கள் ஆட்டமிழந்த பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் (23 பந்துகளில் 48 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் ஹார்திக் பாண்ட்யா (23 பந்துகளில் 48 ரன், 6 ஃபோர், 1 சிக்சர்) இருவரும் மிக அருமையாக ஆடினர்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி இரண்டு விக்கட் இழப்பிற்கு 217 ரன் எடுத்தது.

218 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒரு மட்டையாளர்கூட இன்று சரியாக ஆடவில்லை.

எட்டாவது இடத்தில் இறங்கிய ஜோஃப்ரா ஆர்ச்சர் (27 பந்துகளில் 30 ரன்) தவிர மற்ற வீரர்களான யசஸ்வீ ஜெய்ஸ்வால் (6 பந்துகளில் 13 ரன்), வைபவ் சூர்ய வன்ஷி (பூஜ்யம் ரன்), நிதீஷ் ராணா (9 ரன்), ரியன் பராக் (16 ரன்), துருவ் ஜுரல் (11 ரன்), ஷிம்ரோன் ஹெட்மயர் (பூஜ்யம் ரன்), சுபம் துபே (15 ரன்), தீக்ஷணா (2 ரன்), குமார் கார்த்திகேயா சிங் (4 ரன்) என அனைத்து மட்டையாளர்களும் இன்று மும்பை அணியின் பந்துவீச்சாளர்களைச் சமாளிக்க முடியாமல் திணறினார்கள்.

போல்ட், பும்ரா, கர்ண் ஷர்மா, பாண்ட்யா, தீபக் சாஹார் என அனைத்து பந்துவீச்சாளர்களும் துல்லியமாக பந்துவீசினார்கள்; விக்கட் எடுத்தார்கள்.

மும்பை அணி ஆட்டத்தின் அனைத்து துறைகளிலும் இன்று சிறப்பாகச் செயல் பட்டது.

மும்பை அணியின் தொடக்க வீரர் ரியன் ரிக்கிள்டன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories