மீண்டும் தொடங்கிய ஐபிஎல்., 2025; அதே ‘டெம்போ’வில்!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – 18.05.2025
– இரண்டு ஆட்டங்கள்

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பஞ்சாப் vs ராஜஸ்தான் – ஜெய்ப்பூர்

பஞ்சாப் கிங்க்ஸ் அணி (219/5, நெஹல் வதேரா 70, ஷஷாங்க் சிங் 59, ஷ்ரேயாஸ் ஐயர் 30, பிரப்சிம்ரன் சிங் 21, அஸ்மத்துல்லா ஒமர்சாய் 21, துஷார் தேஷ்பாண்டே 2/37, வெனா மபாகா, ரியன் பராக், ஆகாஷ் மத்வால் தலா ஒரு விக்கட்), ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை (209/7, துருவ் ஜுரல் 53, யசஷ்வீ ஜெய்ஸ்வால் 50, வைபவ் சூர்யவன்ஷி 40, சஞ்சு சாம்சன் 20, ஹர்ப்ரீத் ப்ரார் 3/22, மார்கோ ஜேன்சன் 2/41, ஒமர்சாய் 2/44) 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவா தலையா வென்ற பஞ்சாப் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அதன் தொடக்க வீரர்களில் ஒருவரான பிரியான்ஷ் ஆர்யா (9 ரன்) இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் மூன்றாவதாகக் களமிறங்கிய மிட்சல் ஓவன் (பூஜ்யம் ரன்) ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் பிரப் சிம்ரன் சிங் (10 பந்துகளில் 21 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) நாலாவது ஓவர் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். மிக மோசமான நிலையில் இருந்த பஞ்சாப் அணியின் ஸ்கோரை நெஹல் வதேரா (37 பந்துகளில் 70 ரன், 5 ஃபோர், 5 சிக்சர்), ஷ்ரேயாஸ் ஐயர் (25 பந்துகளில் 30 ரன், 5 ஃபோர்) மற்றும் ஷஷாங்க் சிங்-உடன் (30 பந்துகளில் 59 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்) இணைந்து நல்ல நிலைக்கு உயர்த்தினார். இறுதியில் விளையாட வந்த அஸ்மத்துல்லா ஓமர்சாய் (9 பந்துகளில் 21 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) சிறப்பாக ஆடியதால் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுகள் இழப்பிற்கு 219 ரன் எடுத்தது.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

          220 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆட ஆரம்பித்தா ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்கத்தில் வெகு வேகமாக ரன் சேர்த்தது. பின்னர் சுணக்கம் ஏற்பட்டு 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுப்போனது. 16ஆவது ஓவர் முடிவில் வெற்றிக்கு 55 ரன்கள் தேவைப்பட்டது. துருவ் ஜுரல் (31 பந்துகளில் 53 ரன், 3 ஃபோர், 4 சிக்சர்) மற்றும் ஷிம்ரன் ஹெட்மயர் (11 ரன்) இருவரும் ஆடிக்கொண்டிருந்தார்கள். 20ஆவது ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டன். ஆனால் அதுவரை நன்றாக ஆடிக்கொண்டிருந்த துருவ ஜுரல் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் வனிந்து ஹசரங்கா ஆட்டமிழந்தார். அடுத்த மூன்று பந்துகளில் 20 ரன்கள் அடிக்க வேண்டிய நிலை. ஆனால் அந்த 20 ரன்களை ராஜஸ்தான் அணி அடிக்க முடியவில்லை. அதனால் அந்த அணி தோல்வியைத் தழுவியது.

          மூன்று விக்கட்டுகள் எடுத்த பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர் ஹர்ப்ரீத் ப்ரார் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

டெல்லி vs குஜராத்

டெல்லி கேபிடல்ஸ் அணியை (199/3, கே.எல் ராகுல் 112, அபிஷேக் போரல் 30, அக்சர் படேல் 25, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 21, அர்ஷத் கான், பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் தலா ஒரு விக்கட்), குஜராத் டைடன்ஸ் அணி (205/0, சாய் சுதர்ஷன் ஆட்டமிழக்காமல் 108, ஷுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 93) 10 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

          பூவாதலையா வென்ற குஜராத் டைடன்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மட்டையாடவந்த டெல்லி அணிக்கு கே.எல். ராகுல் இன்று தொடக்கவீரராகக் களமிறங்கினார். ஆனால் மற்றொரு தொடக்க வீர டியூ பிளேசிஸ் (5 ரன்) நாலாவது ஓவரில் ஆட்டமிழந்தார். ஆனால் ராகுல் (65 பந்துகளில் 112 ரன், 14 ஃபோர், 4 சிக்சர்) கடைசி வரை ஆட்டமிழக்காமல் அபிஷேக் போரல் (19 பந்துகளில் 30 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்), அக்சர் படேல் (16 பந்துகளில் 25 ரன், 2 ஃபோர் 1 சிக்சர்) மற்றும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (10 பந்துகளில் 21 ரன், 2 சிக்சர்) ஆகியோருடன் இணைந்து அணி யின் ஸ்கோரை 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கட் இழப்பிற்கு 199 ரன் என்ற நிலைக்குக் கொண்டுவந்தார்.

          200 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவதாகக் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் சாய் சுதர்ஷன் (61 பந்துகளில் 108 ரன், 12 ஃபோர், 4 சிக்சர்) மற்றும் ஷுப்மன் கில் (53 பந்துகளில் 93 ரன், 3 ஃபோர், 7 சிக்சர்) இந்த ஐபிஎல் சீசனில் வெற்றிகரமான தொடக்க வீரர் ஜோடி ஆகும். இவர்கள் இருவரும் 19 ஓவர்களில் 205 ரன் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.

ALSO READ:  பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

          குஜராத் அணியின் சாய் சுதர்ஷன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.   

புள்ளிப் பட்டியலில் தற்போது முதல் மூன்று இடங்களில் உள்ள குஜராத் (18), பெங்களூரு (17), பஞ்சாப் (17) ஆகிய அணிகள் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டன. நாலாவ்து இடத்திற்கு வரப்போகும் அணி எது என்பது மீதமுள்ள ஆட்டங்களில் முடிவாகும்.

image 2 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories