December 5, 2025, 8:26 PM
26.7 C
Chennai

IPL 2025: ‘தேறிய’ அந்த நான்கு அணிகள்!

ipl 2025 games - 2025

ஐ.பி.எல் 2025 – லக்னோ vs குஜராத்
அகமதாபாத் – 22.05.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி (235/2, மிட்சல் மார்ஷ் 117, நிக்கோலஸ் பூரன் ஆட்டமிழக்காமல் 56, எஉடன் மர்க்ரம் 36, ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் 16, அர்ஷத் கான், சாய் கிஷோர் தலா ஒரு விக்கட்), குஜராத் டைடன்ஸ் அணியை (202/9, ஷாருக் கான் 57, ரூதர்ஃபோர்ட் 38, ஷுப்மன் கில் 35, ஜாஸ் பட்லர் 33, சாய் சுதர்ஷன் 21, வில் ஓ ரூர்கே 3/27, ஆவேஷ் கான் 2/51, ஆயுஷ் பதோனி 2/4, ஆகாஷ் சிங், ஷாபாஸ் அகமது தலா ஒரு விக்கட்) 33 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற குஜராத் டைடன்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் எய்டன் மர்க்ரம் (24பந்துகளில் 36 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) 10 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்கவீரரான மிட்சல் மார்ஷ் (64 பந்துகளில் 117 ரன், 10 ஃபோர், 8 சிக்சர்), நிக்கோலச் பூரன் (27 பந்துகளில் 56 ரன், 4 ஃபோர், 5 சிக்சர்) மற்றும் ரிஷப் பந்த் (6 பந்துகளில் 16 ரன், 2 சிக்சர்) உடன் இணைந்து வெகுவேகமாக அணியின் ஸ்கோரை 20 ஓவருக்கு 2 விக்கட் இழப்பிற்கு 235 ரன் என்ற நிலைக்குக் கொண்டுவந்தார். குஜராத் அணியின் பந்துவீச்சாளர்கள் மார்ஷ் மற்றும் பூரன் இருவரின் அதிரடி ஆட்டத்தால் நிலைகுலைந்து போனார்கள்.

236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கோடு இரண்டாவதாகக் களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் அணியின் முதல் ஐந்து மட்டையாளர்கள் சிறப்பாக ஆடினார்கள். சாய் சுதர்ஷன் (16 பந்துகளில் 21 ரன், 4 ஃபோர்) மற்றும் ஷுப்மன் கில் (20 பந்துகளில் 35 ரன், 7 ஃபோர்) ஆகிய இருவரும் சுமாரான தொடக்கம் தந்தனர்.  

பின்னர் வந்த ஜாஸ் பட்லர் (18 பந்துகளில் 33 ரன், 3 ஃபோர், 2சிக்சர்), ரூதர்ஃபோர்ட் (22 பந்துகளில் 38 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்), ஷாருக் கான் (29 பந்துகளில் 57 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்) ஆகியோர் வேகமாக ரன் சேர்க்க முயன்றனர். நீண்ட நாள்களுக்குப் பிறகு இன்று தமிழக வீரர், ஷாருக் கான் ரன் அடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அவர் கடைசி வரை இருந்து வெற்றிக்கு வழிவகுக்காமல் 18.5 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

ஆனால் அதற்கு முன்னரே ராகுல் திவாத்தியா (2 ரன்), அர்ஷத் கான் (1 ரன்) ஆகியோர் ஆட்டமிழந்து விட்டதால் குஜராத் அணியின் தோல்வி உறுதியாகிவிட்டது. இறுதியில் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது.

லக்னோ அணியின் மிட்சல் மார்ஷ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியால் குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் தனது முதலிடத்தை இழக்கவில்லை. இருந்தாலும் இது ஒரு பின்னடைவு.

ஏற்கெனவே நேற்றைய மும்பை-டெல்லி போட்டியின் முடிவில் பிளேஆஃப் சுற்றுக்குச் செல்லும் நான்கு அணிகள் முடிவாகிவிட்டன. அவை குஜராத், பெங்களூரு, பஞ்சாப், மும்பை ஆகிய அணிகளாகும்.

image 3 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories