ஆசிய கோப்பை கிரிக்கெட் – 2025: செய்தி என்ன?

asia cup cricket 2025 - 2026

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஆசிய கோப்பை ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டி 1984ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதலில் இது ஒரு ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான கோப்பையாக இருந்தது.

பின்னர் 2016ஆம் ஆண்டு முதல் ஒரு முறை டி20 போட்டியாகவும் அடுத்தமுறை ஒருநாள் போட்டியாகவும் நடத்தப்பட்டு வருகிறது. 2014 வரை நடந்த ஆசிய கோப்பை ஒருநாள் போட்டிகளில் இந்தியா ஐந்து முறை கோப்பையை வென்றிருக்கிறது. இலங்கை அணி ஐந்து முறையும் பாகிஸ்தான் அணி இரண்டு முறையும் கோப்பையை வென்றிருக்கின்றன.

2016க்குப் பிறகு டி20 கோப்பையை இந்தியா ஒரு முறையும் இலங்கை ஒருமுறையும் வென்றிருக்கின்றன. 2016க்குப் பிறகு ஒருநாள் போட்டிக்கான கோப்பையை இந்தியா இரண்டு முறை வென்றிருக்கிறது.

டி20 தரவரிசையில் இந்திய அணி முதலிடத்திலும் இலங்கை அணி ஏழாவது இடத்திலும் பாகிஸ்தான் எட்டாவது இடத்திலும் ஆஃப்கானிஸ்தான் ஒன்பதாவது இடத்திலும் வங்கதேசம் பத்தாவது இடத்திலும் உள்ளன.

எனவே கோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு மிகவும் பிரகாசமாக உள்ளது. இந்த நிலையில் இந்திய அணி ஒரு ஆட்டத்தை வென்றது என்பது செய்தியே அல்ல. தோற்றால்தான் செய்தி.

செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கிய இந்த வருட ஆசியகோப்பை போட்டி ஒரு டி20 போட்டி. முதல் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி (188/6) ஹாங்காங் அணியை (94/9) 94 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணி (4.3 ஓவர்களில் 60/1) ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை (57) 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. மூன்றாவது ஆட்டத்தில் வங்கதேச அணி (144/3) ஹாங்காங் அணியை (143/7) ஏழு விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

நான்காவது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி (160/7) ஓமன் அணியை (67) 93 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஐந்தாவது ஆட்டத்தில் இலங்கை அணி (140/4) வங்கதேச அணியை (139/5) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. நேற்று (14.09.2025) நடந்த ஆறாவது ஆட்டத்தில் இந்திய அணி (15.5 ஓவர்களில் 131/3) பாகிஸ்தான் அணியை (127/9) ஏழு விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்தியாவிற்கு ஓமான் அணியுடனான ஒரு ஆட்டம் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்தப் போட்டிக்காக அணிகள் குருப் ஏ மற்றும் குருப் பி என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. குருப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஒமான் மற்றுன் ஐக்கிய அரபு எமிரேட்டு அணிகள் உள்ளன. குருப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கனிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் உள்ளன.

அரையிறுதிக்கு குருப் ஏ பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் தேர்வாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குருப் பி பிரிவிலிருந்து இலங்கை வங்கதேசம் ஆகிய அணிகள் தேர்வாகும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

அரையிறுதி ஆட்டங்கள் செப்டம்பர் 21ஆம் தேதியும் இறுதிப் போட்டி செப்டம்பர் 24ஆம் தேதியும் நடைபெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories