T20 WC 2026: இலங்கை, இத்தாலி, இந்திய அணிகளின் வெற்றிகள்!

icc t20 worldcup - 2026

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டிஆறாம் நாள் 12.02.2026

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          இன்று (12.02.2026) முதல் ஆட்டம் காலை 1100 மணிக்கு இலங்கை ஓமன் இடையே பல்லேகலே மைதானத்திளும் இரண்டாவது ஆட்டம் மதியம் 0300 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் இத்தாலி நேபாள் அணிகளுக்கிடையேயும் மூன்றாவது ஆட்டம் டெல்லியில் இந்திய நமீபிய அணிகளுக்கு இடையே இரவு 0700 மணிக்கும் நடைபெற்றது.

இலங்கை அணி எளிதில் வெற்றி பெற்றது

          பூவாதலையா வென்ற ஓமன் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் இலங்கை அணி முதலில் மட்டையாட வந்தது. அந்த அணியின் குசால் மெண்டிஸ் (61 ரன்), பவன் ரத்னநாயகே (60 ரன்), தசுன் ஷனகா (50 ரன்) ஆகியோர் மிகச் சிறப்பாக ஆடியதால் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 225 ரன் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஓமன் அணியில் முகம்மது நதீம் (ஆட்டமிழக்காமல் 53 ரன்) வாசிம் அலி (27 ரன்) ஆகிய இருவர் மட்டுமே சிறப்பாக ஆடினர். மற்ற மட்டையாளர்கள் இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களைச் சமாளிக்க முடியாமல் விரைவில் ஆட்டமிழந்தன்ர். இலங்கை அணியில் மஹீஷ் தீக்ஷனா மற்றும் துஷ்யந்த் சமீரா இருவரும் தலா 2 விக்கட் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் ஓமன் அணி 9 விக்கட் இழப்பிற்கு 120 ரன் மட்டுமே எடுத்தது. அதனால் இலங்கை அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.  

ALSO READ:  தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

இத்தாலி அணி அபார வெற்றி

          இரண்டாவது ஆட்டத்தில் பூவாதலையா வென்ற இத்தாலி அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் நேபாள அணி முதலில் மட்டையாட வந்தது. 19.3 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து நேபாள அணி 123 ரன் எடுத்தது. இத்தாலி அணியின் பென் மனெண்டி 2 விக்கட்டுகளும் கிரிஷன் கழுகுமகே 3 விக்கட்டுகளையும் எடுத்தனர். இரண்டாவதாக ஆடவந்த இத்தாலி அணி 12.4 ஓவர்களில் விக்கட் இழப்பின்றி 124 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜஸ்டின் மோஸ்கா 60 ரன்னும் அந்தோணி மோஸ்கா 62 ரன்னும் அடித்தனர். இவ்வாறு இத்தாலி அணி அபார வெற்றி பெற்றது.

எதிர்பார்த்தபடி இந்திய அணி விளையாடவில்லை; இருந்தாலும் வெற்றி

          பூவாதலையா வென்ற நமீபிய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இந்திய அணியும் இதைத்தான் விரும்பியிருக்கும். முதலில் மட்டையாடி 300 ரன் அடிக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. ஆனால் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கட் இழப்பிற்கு 209 ரன் மட்டுமே எடுத்தது. இன்று அபிஷேக் ஷர்மா விளயாடவில்லை. அவருக்குப் பதிலாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் (8 பந்துகளில் 22 ரன், 3 சிக்சர்) சிறப்பாக ஆடினார்.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

ஆனால் 2ஆவது ஓவரில் ஆட்டமிழந்துவிட்டார். அதன் பின்னர் இஷான் கிஷன் (24 பந்துகளில் 61 ரன், 6 ஃபோர், 5 சிக்சர்) திலக் வர்மா (21 பந்துகளில் 25 ரன்) இருவரும் மிகச் சிறப்பாக ஆடினர். பவர்பிளே ஓவர்களில் இந்த இருவரின் ஆட்டத்தால் இந்திய அணி 86 ரன் எடுத்தது. அதன் பின்னர் இந்திய அணியின் ரன் அடிக்கும் வேகத்தை நமீபிய பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினர். சூர்யகுமார் யாதவ் (12 ரன்), ஷிவம் துபே (23 ரன்) இருவரும் தாம்தூம் என அடித்து ஆடமுடியவில்லை. ஹார்திக் பாண்ட்யா (28 பந்துகளில் 52 ரன், 4 ஃபோர், 4 சிக்சர்) சிறப்பாக ஆடினார். ரிங்கு சிங் 6 பந்துகள் ஆடி 1 ரன் மட்டுமே எடுத்தார்.

          இரண்டாவதாக ஆடிய நமீபிய அணிக்கு தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கம் தந்தனர். ஆனால் வருண் சக்ரவர்த்தி, பும்ரா இருவரும் பந்துவீச வந்தபின்னர் அவர்களது விக்கட்டுகள் மடமடவென விழத்தொடங்கின. அந்த அணி 18.2 ஓவர்களில் 116 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. அதனால் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

          நாளை (13.02.2026) முதல் ஆட்டத்தில் காலை 1100 மணிக்கு கொழும்புவில் நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ஜிம்பாபே அணிகள் மோதுகின்றன. இரண்டாவது ஆட்டத்தில் மதியம் 0300 மணிக்கு டெல்லியில் கனடா ஐக்கிய அரபு எமிரேட்டு அணிகள் விளையாடுகின்றன. மூன்றாவது ஆட்டத்தில் இரவு 0700 மணிக்கு சென்னையில் நெதர்லாந்து அமெரிக்க அணிகள் மோதுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Topics

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Entertainment News

Popular Categories