ஒரு வயது குழந்தை நடுவீட்டில் அழுதபடி நிற்க.. அடுத்தடுத்த அறையில் தாயும் தந்தையும் தூக்கிட்டு தற்கொலை!

parents

காதல் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த இளம் தம்பதி அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர்களின் ஒரு வயது குழந்தை அனாதையாகியுள்ளது

சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பிரின்ஸ். இவரும் சந்திரிகா என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்த நிலையில் இரண்டாண்டுகளுக்கு முன்னர் குடும்பத்தாரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் குடும்பத்தார் மற்றும் உறவினர்களுடன் உள்ள தொடர்பை சந்திரிகா முழுவதுமாக இழந்த நிலையில் கணவருடன் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார்.

இந்த தம்பதிக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மருந்து நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த பிரின்சுக்கு கொரோனா லாக்டவுன் காரணமாக வேலை பறிபோனது. இதனால் வருமானம் இன்றி அவர் தவித்தார்,

இது தொடர்பாக கணவன் மனைவி, இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. நேற்றும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் பிரின்ஸ் தனது அறைக்குள் சென்று மனைவியின் புடவையால் தூக்கிட்டு கொண்டார்.

இதை ஜன்னல் வழியாக பார்த்து அதிர்ச்சியடைந்த சந்திரிகா உடனடியாக தனது உறவினருக்கு போன் செய்து நடந்ததை பதற்றத்துடன் கூறினார். பின்னர் குழந்தையை தனியாக விட்டு வீட்டின் இன்னொரு அறைக்கு சென்று தனது துப்பாட்டாவால் தூக்கிட்டு சந்திரிகா தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து உறவினர்கள் மற்றும் போலிசார் சம்பவ இடத்துக்கு வந்த போது பிரின்ஸ் மற்றும் சந்திரிகா ஆகிய இருவரும் தனித்தனி அறையில் சடலமாக தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் இது எதையும் அறியாத அவர்களின் குழந்தை அழுது கொண்டிருந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories