December 6, 2025, 11:06 AM
26.8 C
Chennai

சாத்தான்குளம்… சிபிஐ., விசாரணைக்கு முன் தடயங்களை அழிக்க வாய்ப்பு உள்ளது: நீதிமன்றம்!

madurai highcourt branch
madurai highcourt branch

ஜெயராஜ் – பென்னிக்ஸ் பிரேதப்பரிசோதனை அறிக்கை மூலம் அவர்களுக்கு மோசமான காயங்கள் இருந்தது தெரியவந்துள்ளது என்று நீதிபதிகள்கருத்து தெரிவித்தனர் மேலும் தொடர்புடைய காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய போதுமான ஆதாரங்கள் உள்ளன உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணையின் போது  கருத்து தெரிவிக்கப்பட்டது.

ஜெயராஜ் – பென்னிக்ஸ் வழக்கை சிபிஐ விசாரிக்கத் துவங்கும் வரை நெல்லை டிஐஜி விசாரிக்க இயலுமா?  இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை  கேள்வி எழுப்பியது மேலும் விசாரணைக்கு தாமதமாகும் ஒவ்வொரு நிமிடமும் தடயங்கள் மறைய வாய்ப்பு உள்ளன என்று நீதிபதிகள்  கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

இந்த விவகாரத்தில் விசாரணையை உடனடியாக துவங்குவது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு சற்று நேரம்  விசாரணை ஒத்தி  வைக்கப்பட்டது

முன்னதாக நீதிபதிக்கு மிரட்டல் விடுத்ததாக அவதூறு வழக்கிற்கு ஆளான தூத்துக்குடி ஏடிஎஸ்பி, சாத்தான்குளம் டிஎஸ்பி மற்றும் காவலர் விளக்கம் அளிக்க உத்தரவு இடப்பட்டிருந்தது. தொடர்புடைய காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய போதுமான ஆதாரங்கள் உள்ளன…. என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் மதுரை நீதிமன்றத்தில் சாத்தான்குளம் காவல் அதிகாரிகள் ஆஜர் ஆகினர்

சாத்தான்குளத்தில் வியாபாரிகள் இறந்த வழக்கில் போலீஸ் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜராகினர். 

சாத்தன்குளத்தில் ஊரடங்கின்போது சட்டத்தை மீறியதாக வியாபாரிகள் ஜெயராஜ், பெனிக்ஸ் இருவர் போலீஸரால் கைது செய்யப்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். உடல் சுகவீனம் காரணமாக இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு இறந்தனர்.

இது குறித்து இறந்தவர்களின் குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், உயர் நீதிமன்றம் போலீஸ் ஏடிஎஸ்பி, டிஎஸ்பி மற்றும் காவல் அதிகாரிகளை ஆஜராக உத்தரவிட்டது. இதையடுத்து அனைவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இதனிடையே காவல்துறையினர் தாக்குதல் மற்றும் மரணம் தொடர்பில் வழக்கு பதிவு செய்ய போதிய காரணங்கள் உள்ளன என்றும், சிபிஐ வழக்கு விசாரணையை ஏற்று விசாரணை துவங்கும்முன் தடயங்களை அழிக்க வாய்ப்பு உள்ளதாகவும், எனவே, விசாரணையை ஒரு நிமிடம் கூட தாமதிக்கக் கூடாது, சிபிஐ விசாரணை தொடங்கும் வரை நெல்லை ஐஜி விசாரிக்க முடியுமா? என்றும் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், அரசிடம் பேசி பதில் தரச் சொல்லி 12 மணி வரை வழக்கை ஒத்திவைத்தது. 

  • செய்தி: ரவிச்சந்திரன் மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories