முதுகு வலியால் துடித்த இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை!

nagoor - 2026

நாகையை அடுத்த நாகூர் பகுதியில் வசித்து வருபவர் முருகன். 21 வயதாகிறது. இவர் ஒரு பட்டதாரி. கடந்த வருடம் இவருக்கு சென்னையில் ஒரு ஆஸ்பத்திரியில் முதுகில் ஆபரேஷன் செய்யப்பட்டது. இதற்கு பிறகு மாச மாசம் செக்கப்புக்கு வந்து, சிகிச்சையும் பெற்று கொள்ளுமாறு டாக்டர்கள் சொல்லி உள்ளனர்.

அதன்படியே முருகனும் சென்னைக்கு வந்து சென்றுள்ளார். இந்த சமயத்தில்தான் லாக்டவுன் போட்டுவிட்டனர். அதனால் சில மாதங்களாகவே முருகனால் சென்னைக்கு வர முடியவில்லை. மேலும், பஸ், ரெயில் என எல்லா போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதால் முருகனால் சென்னை வரவே முடியாத சூழல் ஏற்பட்டது.

முறையான சிகிச்சையை எடுத்து கொள்ள முடியாததால் முருகனுக்கு மறுபடியும் முதுகில் வலி வந்துவிட்டது. பொறுக்க முடியாத வலி ஏற்பட்டதால், தன்னுடைய பெற்றோரிடம் ட்ரீட்மென்ட்டுக்காக சென்னைக்கு அழைத்து செல்லுமாறு கேட்டுள்ளார்.

ஆனால் குடும்பமோ வறுமையில் சிக்கி கொண்டுள்ளது. அதனால் போதுமான அளவுக்கு பணம் இல்லை என்று பெற்றோர் சொல்லி உள்ளதாக தெரிகிறது. இதனால் முதுகு வலி தாங்க முடியாமல் அவதிப்பட்ட முருகன் வீட்டில் இருந்த விஷத்தை அதாவது பூச்சி கொல்லி மருந்தை எடுத்து குடித்துவிட்டார். இதையடுத்து அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தும், பலனின்றி முருகன் இறந்துவிட்டார்.

மருத்துவ சிகிச்சைக்கு செல்ல பணம் இல்லாத விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாகூர் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. நாகூர் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து இது சம்பந்தமாக விசாரித்து வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Topics

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories