February 21, 2026, 10:15 PM
27.3 C
Chennai

தனியார் நிறுவன பால் லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.6 வரை விலை உயர்வு ..

images 2022 10 17T164620.255 - 2026

தமிழகத்தில் இரு மாதங்களுக்கு பிறகு பால் விலையை அதிகரித்து உள்ள தனியார் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.6 வரை விலை உயர்வு செய்து உள்ளன.

தமிழகத்தில் ஆவின் நிறுவனம் மூலம் தினமும் சுமார் 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. இருந்தாலும் இது தமிழக நுகர்வோர் பால் துறையில் வெறும் 16 சதவீதத்தையே பூர்த்தி செய்தது. மீதமுள்ள 84 சதவீதத்தை தனியார் பால் விற்பனையாளர்களே பூர்த்தி செய்து வருகிறார்கள்.

பால் கொள்முதல் விலை அடிக்கடி உயர்த்தப் படுவதால் தனியார் பால் விலையும் உயர்த்தப் படுகிறது. சமீப காலமாக கால்நடை தீவனப் பொருட்கள் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் ஹெரிடேஜ், ஜெர்சி, ஆரோக்கியா ஆகிய 3 தனியார் பால் நிறுவனங்கள் தொடர்ந்து விலையை உயர்த்தி வருகின்றன.

இந்த ஆண்டு இதுவரை 3 தடவை பால் விலை அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் நேற்று 4-வது முறையாக 3 தனியார் நிறுவனங்களும் பால் விலையை அதிரடியாக உயர்த்தி அறிவித்து உள்ளன. இந்த பால் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. 2 மாதங்களுக்கு பிறகு பால் விலையை அதிகரித்து உள்ள தனியார் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.6 வரை விலை உயர்வு செய்து உள்ளன. ஜெர்சி, ஹெரிட்டேஜ் நிறுவனங்கள் பால் விலையை தலா ரூ.6 மற்றும் ரூ.4 என்ற விகிதத்தில் உயர்த்தி இருக்கின்றன. ஆரோக்கியா நிறுவனம் லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பதாக அறிவித்து உள்ளது. இதனால் ஜெர்சி பால் லிட்டருக்கு ரூ.59ல் இருந்து ரூ.62-ஆக உயர்ந்துள்ளது. ஜெர்சி, ஹெரிட்டேஜ் நிறுவனங்களின் பால் விலை ரூ.70 மற்றும் ரூ.72-ஆக உள்ளது. தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தி உள்ள போதிலும் ஆவின் நிறுவனம் பால் விலையை உயர்த்தவில்லை.

அதற்கு பதில் ஆவின் பால் விற்பனையை அதிகரிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். தனியார் நிறுவனங்களின் பால் விலைக்கும், ஆவின் நிறுவனத்தின் பால் விலைக்கும் தற்போது லிட்டருக்கு 22 ரூபாய் வித்தியாசம் உள்ளது. என்றாலும் தேவை காரணமாக தனியார் பால் விற்பனை தொடர்ந்து அதிகரித்தபடியே இருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories