சிதம்பரத்தில் பரபரப்பு.ஆட்சியர்‌ முன்னே தீக்குளிக்க முயன்ற ஓய்வு அதிகாரி..

IMG 20230308 WA0058 - 2026
சிதம்பரம் அருகே கூத்தன் கோயில் பகுதிக்கு ஆய்வு மேற்கொள்ள வந்த ஆட்சியர் பாலசுப்பிரமணியம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்ற சம்பந்தம்

மாவட்ட ஆட்சியர் கண் முன்பே பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற ஓய்வு பெற்ற தாட்கோ துணை மேலாளரால் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் தாலுக்கா பேரூர் கிராமத்தை சேர்ந்தவர் சம்பந்தம் இவர் தாட்கோவில் உதவி மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன்கள், அருண்பிரசாத் மற்றும் பிரசாத், ஆகியோர் சுமார் 20 லட்சம் மதிப்புள்ள 50 செண்ட் இடம் மற்றும் வீட்டுமனைகளை இவரிடம் இருந்து அபகரித்து விட்டதாக கூறப்படுகிறது .

மேலும் இது மட்டும் இன்றி அவரது பெயரில் இருந்த சொத்துக்களை ஸ்ரீமுஷ்ணம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் துணை வட்டாட்சியர் உதவியுடன் சம்பந்தத்தின் பெயரில் இருந்த சொத்துக்களை, அவரது இரு மகன்களும் அவர்கள் பெயரில் மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த சம்பந்தம் சட்டவிரோதமாக தனது பெயரில் இருந்த சொத்துக்களை பெயர் மாற்றம் செய்வதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூன்று ஆண்டுகளாக கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சிதம்பரம் உதவி ஆட்சியர் மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் பெறும் அலுவலர் ஆகியோருக்கு மனுக்கள் அளித்தும், அந்த மனுக்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 27ஆம் தேதி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் புகார் மனு அளித்துள்ளார். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் இதன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
மனு மீதான விசாரணை கடந்த மார்ச்.6 தேதி நடைபெற்ற போது சம்பந்தம் ஆஜராகினார்.

சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் விசாரணைக்கு சென்ற சம்பந்தம் தன் தரப்பு நியாயங்களையும் ஆதாரங்களையும் எடுத்துக்காட்டிய பொழுது அதனை உதவி ஆட்சியர் பார்க்காமலும் கையால் தட்டி விட்டும் சார் ஆட்சியரின் உதவியாளர் சம்பந்தத்தை மனரீதியாக பாதிக்கும் அளவிற்கு கேளியும் கிண்டலும் செய்துள்ளதாக தெரிகிறது, பிறகு சார் ஆட்சியர் வெளியே போ என்று கூறியும் சம்பந்தத்தை கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார்.

இந்நிலையில் சிதம்பரம் பகுதியில் கூத்தங்கோயில் பகுதியில் பணிகளை ஆய்வு மேற்கொள்ள புதன்கிழமை வருகை தந்த கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியன் முன்பே சம்பந்தம் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது ஆட்சியரின் பாதுகாப்பு காவலர் மற்றும் உதவியாளர் ஆகியோர் பெட்ரோல் கேனை பிடுங்கி அவர் மீது தண்ணீர் ஊற்றி அவரை அப்புறப்படுத்தினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Entertainment News

Popular Categories