சென்னை மெரினாவில் உள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அழகிரி, குடும்பத்தினருடன் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, தனது மனதில் உள்ள ஆதங்கத்தை என் அப்பாவிடம் வேண்டிக் கொண்டேன். அது என்ன ஆதங்கம் என்பது இப்போது உங்களுக்கு தெரியாது. கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என்னுடன் இருக்கிறார்கள். தனது ஆதங்கம் கட்சி தொடர்பானது. குடும்பம் தொடர்பானது அல்ல. அனைத்திற்கும் காலம் பின்னால் பதில் சொல்லும். தான் தற்போது திமுக.,வில் இல்லை. அதனால் நாளை நடைபெற போகும் செயற்குழு பற்றி தனக்கு தெரியாது. மீண்டும் திமுக.,வில் இணைவது பற்றி எனக்கு தெரியாது என்றார்.
அனைத்திற்கும் காலம் பின்னால் பதில் சொல்லும்: முக அழகிரி
Popular Categories



