December 5, 2025, 6:42 PM
26.7 C
Chennai

சர்க்கார் படத்துக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

sarkar audio launch - 2025

சன் பிக்சர்ஸின் சார்பில் கலாநிதி மாறன் தயாரிப்பில், நடிகர் விஜய் நடித்துள்ள சர்க்கார் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சன் டிவி குழும தலைவர் கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள சர்கார் படம், தீபாவளிக்கு வெளிவர உள்ளது. இந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதை தன்னுடையது என கூறி சென்னையை சேர்ந்த எழுத்தாளர் கே.வி.ராஜேந்திரன் என்ற வருண் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில் சர்க்கார் படத்தின் கதையை “செங்கோல்” என்ற தலைப்பில் எழுதி, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் தாம் பதிவு செய்திருப்பதாகக் கூறியுள்ளார். தன் கதையை திருடி, சர்க்கார் என்ற தலைப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை இயக்கியிருப்பதாக வருண் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் செய்ததாகவும், அச்சங்கத்தின் தலைவர் கே.பாக்கியராஜ், இருதரப்பையும் அழைத்து விசாரித்தார் என்றும், இறுதியில், இருவரது கதையும் ஒரே கதை தான் என்றும் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

தன் கதையில் சட்ட மாணவன் ஒருவன் வாக்களிக்கச் செல்லும் பொழுது அவனுடைய வாக்கை வேறு ஒருவர் பதிவு செய்வதாகவும், அதனை எதிர்த்து அவன் வழக்கு தொடர்ந்து வெற்றி பெறுவதாகவும் கதை எழுதி இருந்ததாக வருண் தெரிவித்துள்ளார். இவ்வாறான, தமது கதையில், இயக்குநர் முருகதாஸ் சில மாற்றங்களுடன் தொழிலதிபர் ஒருவர் தன் வாக்கை மற்றவர்கள் பதிவு செய்வதை எதிர்த்து வெற்றி பெறுவது போன்று கதையை அமைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

எனவே இந்தக் கதை மற்றும் திரைக்கதை முற்றிலும் தம்முடையதே என்றும் தெரிவித்துள்ளார். எனவே, இந்த படத்தின் கதையில் தன் பெயரையும் இணைக்க வேண்டும், 30 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும், வழக்கு முடியும் வரை சர்கார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் அவரது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை வியாழக் கிழமையன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி சுந்தர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories