பிரதமர் பங்கேற்ற மதுரை நிகழ்ச்சிகள்… இவைதான் நடந்தன!

bjp meeting - 2026

பிரதமர் மோடி மதுரையில் நடைபெற்ற விழாக்களில் இன்று பங்கேற்றார். பிரதமர் கலந்து கொண்ட விழாக்களில் நடைபெற்றவை குறித்த சில துளிகள்…

தனி விமானம் மூலம் மதுரை வந்த பிரதமர் தனி விமானத்தில் கேரளா மாநிலம் கொச்சி சென்றார். ஆளுநர், முதல்வர் வரவேற்று, வழி அனுப்பி வைத்தனர்.

மதுரை மண்டேலாநகர் பகுதியில் பாஜக பொதுக் கூட்டம் நடைபெற்றது, அதன் மிக அருகிலேயே எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.

எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா அரசு விழாவாக இருந்த போதிலும், தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைக்கப்படவில்லை.

உலக முதலீட்டாளர் மாநாட்டில் பேச வாய்ப்பு கிடைக்காத துணை முதல்வருக்கு, எய்ம்ஸ் விழாவில் பிரதமர் முன்பு வரவேற்பு சொல்லும் வாய்ப்பு கிடைத்தது. பாஜகவை தொடர்ந்து விமர்சித்து வரும் மக்களவை துணை சபாநாயகர் மேடையில் முக்கிய இடத்தில் அமர்ந்திருந்தார்.

துணை முதல்வர் தனது வரவேற்புரையில் ஆளுநர் பெயரை மறந்து விட்டார். முதல்வர், பிரதமர் இருவர் மட்டுமே பேசினர், நன்றியுரை கிடையாது.

modi lays foundation aiims - 2026

எய்ம்ஸ் அமையும் இடம் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி, விழா நடந்த இடம் மதுரை தொகுதி என்பதால் இரு எம்பிக்கள் மேடையேற வாய்ப்பு கிடைத்தது.

எய்ம்ஸ் விழாவில் தமிழக முதல்வர் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை, பிரதமரும் எந்த அறிவிப்பும், வாக்குறுதியும் கொடுக்கவில்லை.

பாஜக பொதுக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் தமிழிசை வரவேற்புரை ஆற்றும் போது 10 நாடாளுமன்றத் தொகுதி தொண்டர்களையும் தனித்தனியாக எழுந்து நிற்கச் சொல்லி பெருமைப்படுத்தினார். பிரதமர் மட்டுமே பேசினார்.

பிரதமர் மோடி எப்போதும் போல தொலைக்காட்சி செய்தியாளர்கள் பயன்படுத்தும் ப்ராம்டர் பார்த்து பேசினார். வழக்கம் போல் இந்தியில் பேசாமல் முதன் முறையாக தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பேசினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவித்து பேச்சைத் தொடங்கினார்.

பிரதமர் பேச்சை எச்.ராஜா கையில் வைத்திருந்த தமிழ் குறிப்புகளோடு மொழிபெயர்ப்பு செய்த போதிலும் ஓரிடத்தில் தடுமாறினார்.

பாஜக பொதுக் கூட்டம் முடிந்ததும் விமான நிலையத்தில் பிரதமர், முதல்வர், துணை முதல்வர் தேர்தல் தொடர்பான ஆலோசனைகள் செய்ததாக கூறப்படுகிறது.

தமிழகம் வந்த பிரதமருக்கு மதுரை மீனாட்சி, முருகன், ஜல்லிக்கட்டு காளை நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக கூறி கருப்புக்கொடி போராட்டம் நடத்திய வைகோ, கொளத்தூர்மணி, திருமுருகன்காந்தி, முகிலன் உள்பட 300க்கும் மேற்பட்டோர் மதுரையில் கைது செய்யப்பட்டனர்.

எய்ம்ஸ் மட்டுமில்லை.. தமிழகத்தில் இன்று பிரதமர் மோடி துவக்கி வைத்த திட்டங்கள் இவைதான்! அதுகுறித்த பட்டியல் இதோ:

????மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல்லை நாட்டினார்
????மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிகிச்சை மையம் திறப்பு
????திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிகிச்சை மையம் திறப்பு
????தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிகிச்சை மையம் திறப்பு
???? தமிழகத்தில் உள்ள போஸ்ட் ஆபீஸ்களில் 12 பாஸ்போர்ட் சேவை மையங்களையும் மோடி ரிமோட் மூலமாக திறந்து வைத்தார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories