குரூப் தொல்லையா? இதோ புதிய சேவையுடன் வாட்ஸ் அப்!

whats app - 2026

அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் தவிர்க்க முடியாத செயலியாக தகவல் பரிமாற்றத்துக்காக உருவாக்கப்பட்ட வாட்ஸ் அப், இடம் பெற்றுள்ளது.

அதைத் தக்க வைத்துக் கொள்ள, வாட்ஸ் அப் நிறுவனத்தை நிர்வகிக்கும் ஃபேஸ் புக் நிறுவனம் அவ்வப்போது பல புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது.
வாட்ஸ் அப் பயன்பாட்டாளர்கள் குழுக்களை அதிக அளவில் பயன்படுத்துவதால் காலச்சூழலுக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களை அந்த நிறுவனம் கொண்டு வருகிறது.

குழுவின் எண்ணிக்கை அதிகரிப்பால், பயன்பாட்டாளர் பலருக்கு தொல்லையாக அமைந்ததால், பல்வேறு கட்டுப்பாடுகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிவித்து வருகிறது.

முன்பு வாட்ஸ் அப் குழுக்களில் ஒருவரைச் சேர்ப்பதற்கு எந்தவித அனுமதியும், கட்டுப்பாடும் இல்லாமல் இருந்தது.

whats app 1 - 2026

அதன் பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு, யார் யார் உங்களைக் குழுக்களில் சேர்க்கலாம் என்ற கட்டுப்பாடு அறிமுகம் செய்யப்பட்டது.
இதில், யார் வேண்டுமானாலும் உங்களை வாட்ஸ் அப் குழுக்களில் சேர்ப்பது “எவரிஒன்’, செல்லிடப்பேசியில் பதிவிடப்பட்ட தொலைபேசி எண்களில் உள்ளவர்கள் மட்டும் உங்களைக் குழுக்களில் சேர்ப்பதற்கு “மை கான்டாக்ட்ஸ்’, யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதற்கு “நோபடி’ என்ற மூன்று தேர்வுகளை வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்தது.

இந்தச் சேவையால் ஏராளமான வாட்ஸ் ஆப் குழு பயன்பாட்டாளர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். தற்போது “மை கான்டாக்ட்ஸ் எக்சப்ட்’ என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் செல்லிடப்பேசியில் பதிவு செய்யப்பட்ட எண்களில் யார், யார் உங்களை குழுக்களில் சேர்க்கலாம் என தனித் தனியாக அனுமதி அளிக்கலாம். தேவையற்றவர்களைக் கண்டுபிடித்து அவர்கள் உங்களை குழுக்களில் சேர்ப்பதில் இருந்து முன்கூட்டியே தவிர்க்கலாம்.

இந்த புதிய சேவையைப் பெற வேண்டுமென்றால் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்ய வேண்டும். பின்னர் செட்டிங்ஸ் – அக்கவுண்ட் – பிரைவசி – குரூப்ஸ் ஆகியவற்றை கிளிக் செய்து தேர்வு செய்ய வேண்டும்.

இதேபோல், வாட்ஸ் அப்பில் அனுப்பப்பட்ட தொடர் வாய்ஸ் மேசேஜை, வாட்ஸ் அப் கணினியில் ஒன்றை மட்டும் கிளிக் செய்து அனைத்தையும் கேட்கும் புதிய சேவையையும் வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories