‘பிள்ளையாரை எடுத்தா உங்க கடைக்கு வருவோம்..!’ மிரட்டிய வேற்று மதத்தினருக்கு சரவணா ஸ்டோர்ஸின் மிரட்டல் பதில்..!

saravanastores - 2026

பிள்ளையாரை எடுத்தீங்கன்னா… உங்க கடைக்கு வருவோம் என்று வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் சரவணா ஸ்டோர் உரிமையாளரை மிரட்டியதாகவும், அதற்கு சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் ஒரு நெத்தியடி பதிலைத் தந்ததாகவும் இப்போது சமூகத் தளங்களில் ஒரு விஷயம் வைரலாகி வருகிறது.

அண்மைக் காலமாக சரவணா ஸ்டோர்ஸ் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக சமூகத் தளங்களில் வெளியாகும் சில கருத்துகள், இந்த நிறுவனத்தைக் குறிபார்த்து யாரோ இயங்குவது போல் பொதுமக்கள் மத்தியில் ஒரு கருத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நிர்ணயிக்கப் பட்ட விலையை விட அதிக விலை வைத்து போலி ஸ்டிக்கர் ஒட்டி வியாபாரம் செய்கிறார்கள், வாடிக்கையாளரை கவனிப்பதில்லை, முரட்டுத்தனமாக நடத்துகிறார்கள் என்றெல்லாம் கூறி சில வீடியோ பதிவுகளும் உலா வந்தன.

இந்நிலையில், சரவணா ஸ்டோர்ஸ் குறித்து ஒரு பதிவு இப்போது வைரலாகி வருகிறது. அதில்…

supersaravanastore - 2026

குரோம்பேட்டையில் உள்ள சரவணா ஸ்டோரின் முன்பு பிள்ளையார் உள்ளது… பிரச்சினை என்னவென்றால்… குரோம்பேட்டை அருகில் உள்ள பல்லாவரம் பகுதியில் குறிப்பிட்ட மதத்தினர் நாங்கள் அதிகமாக வசித்து வருகிறோம்… குறிப்பிட்ட எங்கள் மதத்தை சேர்ந்தவர்கள் சரவணா ஸ்டோரில் வந்து வியாபாரம் செய்து வருகின்றனர். பிள்ளையார் கோயில் இருப்பது எங்களுக்கு சங்கடமாக உள்ளதால், அதே சரவணா ஸ்டோரின் உரிமையாளர் அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்கள்!

அப்படி அகற்றவில்லை என்றால் எங்கள் மதத்தை சேர்ந்த மக்கள் சரவணா ஸ்டோரில் வந்து எதுவும் வாங்க மாட்டார்கள் என்று மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்கள்!

இதற்கு நெத்தியடி பதில் தந்த சரவணா ஸ்டோர் உரிமையாளர்,… நாங்கள் இவ்வளவு உயரம் வந்ததற்கு காரணமே எங்கள் கடவுள் பக்தி தான் என்று தெரிவித்துள்ளார்! மேலும் பிள்ளையார் கோயிலை அகற்றித்தான் வியாபாரம் செய்ய வேண்டும் என்றால், அப்படிப்பட்ட வியாபாரமே எங்களுக்கு தேவையில்லை என்று நெத்தியடி பதில் தந்துள்ளார் சரவணா ஸ்டோர் உரிமையாளர்!

சரவணா ஸ்டோரின் உரிமையாளருக்கு பாராட்டுக்கள் – என்று கூறி ஒரு பதிவு உலா வருகிறது!

இதுவும் கூட அந்த நிறுவனத்தின் வர்த்தகத்தைக் குலைக்க யாரோ சிலர் செய்யும் வதந்தியாகக் கூட இருக்கலாம் என்கிறார்கள் சிலர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories