மகன் தந்தைக்காற்றும் உதவி…!

Published:

potato
potato

உருளைக்கிழங்கு தோட்டம்- கிராமத்தில் தனியாக வசித்து வந்தார் வயதான தந்தை. அவருடைய ஒரே மகன் சிறையில் இருந்தான். தன்னுடைய தோட்டத்தைக் கொத்தி உருளைக் கிழங்கு விதைக்க விரும்பினார் தந்தை. ஆனால் அந்த கடினமான உழைப்புக்கு அவருடைய வயது ஒத்துழைக்க வில்லை.

சிறையிலிருக்கும் மகனுக்கு ஒரு கடிதம் எழுதினர்:

“என் அன்பு மகனே! நீ என் உடன் இல்லாதது எனக்கு மிகுந்த குறையாக இருக்கிறது. இந்த ஆண்டு நான் உருளைக்கிழங்கு சாகுபடி செய்ய இயலாது போல் தோன்றுகிறது. அதை நினைத்தால் வருத்தமாக உள்ளது. ஏனென்றால் உன் அம்மா சரியான நேரத்தில் தோட்டத்தில் விதை விதைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுவாள். என்ன செய்வது…? நீ இருந்திருந்தால் தோட்டத்தை கொத்தி விதைப்பதில் எனக்கு மிகவும் உதவியாக இருந்திருப்பாய். என் கஷ்டமெல்லாம் நீங்கியிருக்கும்.

  • உன் அன்புத் தந்தை.

சில நாட்கள் கழித்து அந்த கிழவருக்கு ஒரு தந்தி வந்தது.
“தயவு செய்து தோட்டத்தை உழுது விடாதீர்கள், அப்பா. அங்கு தான் நான் துப்பாக்கிகளை புதைத்து வைத்துள்ளேன்”

அன்று இரவு பொழுது விடிவதற்குள் யூனிபாரம் அணிந்த போலீஸ் அதிகாரிகள் பலர் திடீரென்று வந்து இருட்டோடு இருட்டாக கிழவரின் தோட்டம் முழுவதும் கொத்தி விட்டுச் சென்று விட்டார்கள். அவர்களுக்கு எந்த துப்பாக்கியும் கிடைக்கவில்லை.

பாவம்… கிழவருக்கு ஒன்றும் புரியவில்லை. நடந்தவற்றை விளக்கி மகனுக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதினார்.

மகனிடமிருந்து பதில் வந்தது….
“அப்பா! தோட்டம் தான் நன்றாக கொத்தப் பட்டு விட்டதே. உருளைக்கிழங்கை விதைத்து விடுங்கள். இங்கிருந்தபடியே நான் செய்ய முடிந்தது இவ்வளவு தான்.”

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img