சுபாஷிதம்: உண்மையான ரத்தினங்கள்!

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

63. உண்மையான ரத்தினங்கள்!

ஸ்லோகம்:

ப்ருதிவ்யாம் த்ரீணி ரத்னானி ஜலமன்னம் சுபாஷிதம்|
மூடை: பாஷாணகண்டேஷு ரத்னசஜ்ஞா விதீயதே||
– சாணக்யநீதி.

பொருள்: 

இயற்கையில் உயர்வான ரத்தினங்கள் மூன்று. அவை நீர், உணவு, நற்சொற்கள். ஆனால் மூடர்கள் கற்களையே ரத்தினங்கள் என்கிறார்கள். ஏனோ?

விளக்கம்:

ஒளிரும் பொருட்களை மட்டும் மதிப்பு மிக்கவையாக எண்ணுவது தவறு. உண்மையில் மதிப்பு மிகுந்த பொருட்கள் எவை? கற்களை விட மதிப்பு மிகுந்த ரத்தினங்கள் யாவை? என்ற கேள்விக்கு பளீரென்று விளக்கம் அளிக்கும் ஸ்லோகம் இது.

“தான்யானாம் ஸங்ரஹூ ராஜன்னுத்தம: சர்வசங்ரஹாத்”

— ஓ அரசனே! பிற பொருட்கள் அனைத்தையும் விட உணவுப் பொருட்களை சேகரிப்பது உயர்ந்தது.

“நிக்ஷிப்தம் ஹி முகே ரத்னம் ந குர்யாத் ப்ராணதாரணம்”

— ஏனென்றால் பசி எடுக்கும்போது எத்தனை மதிப்பு மிகுந்த ரத்தினம் ஆனாலும் வாயில் இட்டுக்கொண்டால் உயிரை காப்பாற்றுமா? 

ரத்தினங்கள் பசி, தாகத்தைத் தீர்க்க மாட்டா என்ற பொருளில் இந்த ஸ்லோகம் ஹிதோபதேச நூலில் உள்ளது.

பணத்திற்கும் ரத்தினங்களுக்கும் மதிப்பு என்ன என்பது அனுபவத்திற்கு வரும் போது புரியும். ரயில் விபத்தில் சிக்கியபோது… பசி எடுக்கும்போது… பை நிறைய பணம் இருந்தும் உண்பதற்கு ஏதும் கிடைக்காவிட்டால்… வெள்ளத்தில் சிக்கிய போது தாகம் தீர்க்க ஒரு வாய் நீர் இல்லாத போது… அவற்றின் மதிப்பு புரியும். அதனால் நீரும் உணவுமே உண்மையான ரத்தினங்கள்.

அடுத்து மூன்றாவது ரத்தினம் சுபாஷிதம். நீரையும் உணவையும் அடுத்து உயிரை காப்பது நல்ல சொற்களே! வழிதவறிய மனிதனை நல்வழிப்படுத்தி ஊக்கமும் உற்சாகமும் அளித்து உயர்ந்தவனாக்குகிறது.

ஆபத்திலோ, அவசியமானபோதோ நண்பன் கூறும் நற்சொற்கள் நம் வாழ்க்கையே மாற்றக்கூடியது. அதனால் நீர், உணவு, சுபாஷிதம் இம்மூன்றுமே உண்மையான ரத்தினங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories