February 13, 2025, 11:44 AM
25.6 C
Chennai

சுபாஷிதம்: உண்மையான ரத்தினங்கள்!

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

63. உண்மையான ரத்தினங்கள்!

ஸ்லோகம்:

ப்ருதிவ்யாம் த்ரீணி ரத்னானி ஜலமன்னம் சுபாஷிதம்|
மூடை: பாஷாணகண்டேஷு ரத்னசஜ்ஞா விதீயதே||
– சாணக்யநீதி.

பொருள்: 

இயற்கையில் உயர்வான ரத்தினங்கள் மூன்று. அவை நீர், உணவு, நற்சொற்கள். ஆனால் மூடர்கள் கற்களையே ரத்தினங்கள் என்கிறார்கள். ஏனோ?

விளக்கம்:

ஒளிரும் பொருட்களை மட்டும் மதிப்பு மிக்கவையாக எண்ணுவது தவறு. உண்மையில் மதிப்பு மிகுந்த பொருட்கள் எவை? கற்களை விட மதிப்பு மிகுந்த ரத்தினங்கள் யாவை? என்ற கேள்விக்கு பளீரென்று விளக்கம் அளிக்கும் ஸ்லோகம் இது.

“தான்யானாம் ஸங்ரஹூ ராஜன்னுத்தம: சர்வசங்ரஹாத்”

— ஓ அரசனே! பிற பொருட்கள் அனைத்தையும் விட உணவுப் பொருட்களை சேகரிப்பது உயர்ந்தது.

“நிக்ஷிப்தம் ஹி முகே ரத்னம் ந குர்யாத் ப்ராணதாரணம்”

— ஏனென்றால் பசி எடுக்கும்போது எத்தனை மதிப்பு மிகுந்த ரத்தினம் ஆனாலும் வாயில் இட்டுக்கொண்டால் உயிரை காப்பாற்றுமா? 

ரத்தினங்கள் பசி, தாகத்தைத் தீர்க்க மாட்டா என்ற பொருளில் இந்த ஸ்லோகம் ஹிதோபதேச நூலில் உள்ளது.

பணத்திற்கும் ரத்தினங்களுக்கும் மதிப்பு என்ன என்பது அனுபவத்திற்கு வரும் போது புரியும். ரயில் விபத்தில் சிக்கியபோது… பசி எடுக்கும்போது… பை நிறைய பணம் இருந்தும் உண்பதற்கு ஏதும் கிடைக்காவிட்டால்… வெள்ளத்தில் சிக்கிய போது தாகம் தீர்க்க ஒரு வாய் நீர் இல்லாத போது… அவற்றின் மதிப்பு புரியும். அதனால் நீரும் உணவுமே உண்மையான ரத்தினங்கள்.

அடுத்து மூன்றாவது ரத்தினம் சுபாஷிதம். நீரையும் உணவையும் அடுத்து உயிரை காப்பது நல்ல சொற்களே! வழிதவறிய மனிதனை நல்வழிப்படுத்தி ஊக்கமும் உற்சாகமும் அளித்து உயர்ந்தவனாக்குகிறது.

ஆபத்திலோ, அவசியமானபோதோ நண்பன் கூறும் நற்சொற்கள் நம் வாழ்க்கையே மாற்றக்கூடியது. அதனால் நீர், உணவு, சுபாஷிதம் இம்மூன்றுமே உண்மையான ரத்தினங்கள்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பிப்ரவரி 17 ஆம் தேதி வரை தினமும் 20,000 கன மீட்டர் தண்ணீர் திறந்து விடப்படும். பம்பா நதியில் நீர் மட்டம் ஐந்து சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.

Topics

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பிப்ரவரி 17 ஆம் தேதி வரை தினமும் 20,000 கன மீட்டர் தண்ணீர் திறந்து விடப்படும். பம்பா நதியில் நீர் மட்டம் ஐந்து சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.

உசிலம்பட்டி ஆண்டிச்சாமி கோயில், கருப்பட்டி கருப்பண்ண சாமி கோயில்களில் கும்பாபிஷேகம்!

மதுரை மாவட்டத்தில் உள்ள சிவன் ஆலயங்களில், சோமவாரம் பிரதோஷம் நடைபெற்றது.

மஞ்சமலை சுவாமி திருவிழா பிடி மண் எடுக்கும் விழா!

மஞ்சமலை சுவாமி திருவிழா பிடிமண் கொடுக்கும் நிகழ்ச்சியில் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பரங்குன்றம் தைப் பூசத் திருவிழாவில் அரிய காட்சிகள்!

இவ்வாறு ஆண்டிற்கு ஒரு முறை ஒரே நேரத்தில் 2 முருகப்பெருமான், 2 தெய்வானைஎழுந்தருளுவது என்பது திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் தைப்பூச திருவிழாவின் தனி சிறப்பாக இருந்து வருகிறது.

Entertainment News

Popular Categories