December 5, 2025, 5:43 PM
27.9 C
Chennai

சுபாஷிதம்: தடை கண்டு அஞ்சாதே!

subhashitam-4
subhashitam-4

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

64.  தடை கண்டு அஞ்சாதே!

ஸ்லோகம்:

ப்ராரப்யதே ந கலு விக்னபயேன நீசை:
ப்ராரப்ய விக்னனிஹதா: விரமந்தி மத்யா: |
விக்னை: புன:புனரபி ப்ரதிஹன்யமானா:
ப்ராரப்தமுத்தமகுணா: ந பரித்யஜன்தி ||
– பர்த்ருஹரி நீதி (73) 

பொருள்:

கீழ் மனிதர்கள் சமுதாய நலனுக்குப் பயன்படும் செயல்களைத் தொடங்குவதற்கு, ஏதாவது தடை ஏற்படுமோ என்று அஞ்சுவர். 

நடுத்தர மனிதர்கள் பணியை தொடங்கி விட்டு எந்த சிறு சவால் எதிர் வந்தாலும் நடுங்கி வேலையை நிறுத்தி விடுவார்கள். உத்தமர்கள் மட்டுமே எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றைத் தாண்டி வேலையை செய்து முடிப்பார்கள்.

விளக்கம்:

எந்த வேலையானாலும் தொடங்கினால் பலன் கிடைக்காதோ என்னவோ என்று அச்சம்… இறுதிவரை செய்ய முடியுமோ முடியாதோ என்ற சந்தேகம்… இவற்றால் சிலர் எந்த வேலையும் செய்யத் தொடங்க மாட்டார்கள். 

பணியைத் தொடங்கி விட்டு பாதியில் நிறுத்தி விடுவார்கள் வேறு சிலர். மிகச் சிலர் மட்டுமே அனைத்து மேடு பள்ளங்களையும் சகித்துக்கொண்டு முன்னேறுவர். நினைத்ததை சாதிப்பர்.  இம்மூவரின் குணங்களையும் கூறும் சுலோகம் இது.

தடைகளை வென்று இலக்கை அடைவதில் ஓய்வின்றி உழைத்து நினைத்ததை சாதிப்பது உயர்ந்தவர்களின் இயல்பு. அத்தகைய உயர்ந்தவர்களின் பட்டியலில் நாம் உள்ளோமா?

ஒரு சம்பவத்தின் போது மூன்று மனிதர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள் என்று பார்ப்போம். ஓரிடத்தில் நேர்ந்த விபத்தில் ஒருவர் தீவிரமாக காயம் அடைந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றும் வேலை நமக்கு எதற்கு… தலைவலி… என்று ஒருவர் அங்கிருந்து விலகி விட்டார். அடுத்தவர் உதவி செய்ய எண்ணினாலும் மருத்துவமனை, போலீஸ், வழக்கு போன்றவை நினைவுக்கு வந்து செய்யாமல் விட்டார். உயர்ந்த மனிதர் மட்டும் அனைத்து பிரச்சனைகளையும் தாண்டி உயிர் காத்தார்.

சமுதாய நலனுக்காக ஏதாவது பணி செய்ய வேண்டி வந்தால் எதிர்ப்படும் தடைகளைக் கண்டு அஞ்சாதவரே சான்றோர் எனப்படுவர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories