சுபாஷிதம்: உள்நாட்டுப் பாதுகாப்பு!

Published:

subhashitam_1-1
subhashitam_1-1

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

81. உள்நாட்டுப் பாதுகாப்பு!

ஸ்லோகம்:

ராஜானம் ப்ரதமம் விந்தேத் ததோ பார்யாம் ததோ தனம் |
ராஜன்யசதி லோகஸ்ய குதோ பார்யா குதோ தனம் ||
– மகாபாரதம் 

பொருள்:

மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டுமென்றால் அரசாளுபவர் நல்லவராக இருக்க வேண்டும். அதனால் பொதுமக்கள் முதலில் நல்ல அரசனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் தான் திருமணம், பணம் சம்பாதிப்பது எல்லாம். பாதுகாப்பு அளிக்க இயலாத அரசனோ, காப்பாற்ற இயலாத அரசாங்கமோ இருந்தால்  மக்களின் குடும்பத்திற்கும் செல்வத்துக்கும் பாதுகாப்பு எங்கிருந்து  கிடைக்கும்? 

விளக்கம்:

உள்நாட்டுப் பாதுகாப்பு ஏற்படுத்துவது அரசாங்கத்தின் முதல் கடமை. வளர்ச்சிக்கு அதுவே அடையாளம். நாம் தேடிய செல்வத்தை திருடர்கள் கொள்ளையடித்தால்… வயல் வெளிகளையும் சொத்து சுகங்களையும் பிறர் ஆக்கிரமித்தால்… அது அரசரின் குற்றமே!

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

எல்லாக் காலத்திற்கும் பொருந்தும் இந்த செய்தி மகாபாரத காலத்திலேயே அளிக்கப்பட்டுள்ளது. 

திறமையான அரசாட்சி அமையாவிட்டால் நாம் தேடிய செல்வத்துக்கு பாதுகாப்பு இருக்காது.  நம் வீட்டுப் பெண்களுக்கும் பாதுகாப்பு இருக்காது. பொதுமக்களளின் பாதுகாப்பே அரசாங்கத்தின்  முக்கிய நோக்கம். பாதுகாப்பு அமைப்பு பாரபட்சமின்றி பொதுமக்களுக்காக பணி புரியவேண்டும். அதுவே  நல்ல அரசாட்சியின் அடையாளம். வலிமை குன்றியோருக்கு அரசாங்கம் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

ஜனநாயக நாட்டில் மக்கள் தேர்தலில் உற்சாகமாக பங்கு கொள்ள வேண்டும். ஓட்டுரிமையை நன்கு பயன்படுத்த வேண்டும். ஜனநாயக  நாட்டில் நல்ல அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு பொதுமக்களுடையதே என்பது இதன் உட்பொருள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img