சுபாஷிதம்: உள்நாட்டுப் பாதுகாப்பு!

subhashitam_1-1
subhashitam_1-1

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

81. உள்நாட்டுப் பாதுகாப்பு!

ஸ்லோகம்:

ராஜானம் ப்ரதமம் விந்தேத் ததோ பார்யாம் ததோ தனம் |
ராஜன்யசதி லோகஸ்ய குதோ பார்யா குதோ தனம் ||
– மகாபாரதம் 

பொருள்:

மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டுமென்றால் அரசாளுபவர் நல்லவராக இருக்க வேண்டும். அதனால் பொதுமக்கள் முதலில் நல்ல அரசனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் தான் திருமணம், பணம் சம்பாதிப்பது எல்லாம். பாதுகாப்பு அளிக்க இயலாத அரசனோ, காப்பாற்ற இயலாத அரசாங்கமோ இருந்தால்  மக்களின் குடும்பத்திற்கும் செல்வத்துக்கும் பாதுகாப்பு எங்கிருந்து  கிடைக்கும்? 

விளக்கம்:

உள்நாட்டுப் பாதுகாப்பு ஏற்படுத்துவது அரசாங்கத்தின் முதல் கடமை. வளர்ச்சிக்கு அதுவே அடையாளம். நாம் தேடிய செல்வத்தை திருடர்கள் கொள்ளையடித்தால்… வயல் வெளிகளையும் சொத்து சுகங்களையும் பிறர் ஆக்கிரமித்தால்… அது அரசரின் குற்றமே!

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

எல்லாக் காலத்திற்கும் பொருந்தும் இந்த செய்தி மகாபாரத காலத்திலேயே அளிக்கப்பட்டுள்ளது. 

திறமையான அரசாட்சி அமையாவிட்டால் நாம் தேடிய செல்வத்துக்கு பாதுகாப்பு இருக்காது.  நம் வீட்டுப் பெண்களுக்கும் பாதுகாப்பு இருக்காது. பொதுமக்களளின் பாதுகாப்பே அரசாங்கத்தின்  முக்கிய நோக்கம். பாதுகாப்பு அமைப்பு பாரபட்சமின்றி பொதுமக்களுக்காக பணி புரியவேண்டும். அதுவே  நல்ல அரசாட்சியின் அடையாளம். வலிமை குன்றியோருக்கு அரசாங்கம் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

ஜனநாயக நாட்டில் மக்கள் தேர்தலில் உற்சாகமாக பங்கு கொள்ள வேண்டும். ஓட்டுரிமையை நன்கு பயன்படுத்த வேண்டும். ஜனநாயக  நாட்டில் நல்ல அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு பொதுமக்களுடையதே என்பது இதன் உட்பொருள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

Topics

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

Entertainment News

Popular Categories