சுபாஷிதம்: காலம் காத்திருக்காது!

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Published:

subhashitam 1 3 - 2026

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

91. காலம் காத்திருக்காது

ஸ்லோகம்:

ஸ்வ: கார்யமத்ய குர்வீத பூர்வாஹ்ணே சாபராஹ்ணிகம் !
ந ஹி ப்ரதீக்ஷதே ம்ருத்யு: க்ருதமஸ்ய ந வா க்ருதம் !!
– மகாபாரதம்.

பொருள்:

நாளைக்குச் செய்ய வேண்டிய வேலையை இன்றே செய்ய வேண்டும். மதியம் செய்ய வேண்டிய வேலையை காலையே செய்ய வேண்டும். வேலைகள் முடிந்து விட்டதா? இன்னும் உள்ளனவா? என்று மரணம் காத்திருக்காது.

விளக்கம்:,

நாளைக்கு செய்ய வேண்டிய வேலையை இன்றே செய். நல்ல செயல்களை ஒத்தி போடாதே என்று எச்சரிக்கும் ஸ்லோகம் இது.

நமக்கு என்று ஒதுக்கப்பட்ட  வேலைகளுக்கும், நாமே செய்து தீர வேண்டிய வேலைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது இதன் உட்பொருள். தர்மத்தின்படி நடப்பதற்கும் நற்செயல்களைச் செய்வதற்கும் காலம் தாழ்த்தக் கூடாது. அவசரப்படவேண்டும் என்பது இதன் போதனை.

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!

தேர்வுக்குச் செல்ல வேண்டிய மாணவன் திரைப்படம் பார்க்க வேண்டும் என்ற ஆசையை ஒதுக்கி வைக்க வேண்டும். அது தவறல்ல. நேரத்திற்கு உறங்கச் செல்வதா? தொலைக்காட்சிப் பெட்டியின் எதிரில் அமர்வதா? எதை  ஒதுக்கி வைப்பது? எதற்கு முக்கியத்துவம் அளிப்பது? என்பதற்கு இங்கித ஞானம் தேவை.

சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்காமல் போவது என்பது நம் நாட்டில் சர்வ சாதாரணம் என்ற  விமர்சனங்களை கேட்கிறோம். மும்பை பயங்கரவாத தாக்குதல் நடந்த பிறகு சரியான நடவடிக்கை எடுக்காததால்தான் பாகிஸ்தான் நம் நாட்டு எல்லையில் பலமுறை தாக்குதலுக்கு இறங்குகிறது.

நிறுத்தக் கூடாத நேரத்தில் போரினை நிறுத்தி யுஎன்ஓ நோக்கிச் சென்றதால் காஷ்மீர் பிரச்சனை தீராமல் பற்றி எரிந்து கொண்டே உள்ளது.

Related articles

Recent articles

spot_img