சுபாஷிதம்: படித்த அரக்கர்கள்!

சுபாஷிதம்… ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

99. படித்த அரக்கர்கள்!

ஸ்லோகம்:

சாக்ஷரா விபரீதாஸ்சேத் ராக்ஷசா ஏவ கேவலம் |
சரசோ விபரீதோ௨பி சரசத்வம் ந முஞ்சதி ||
– ஹிதோபதேசம்.

பொருள்:

‘சாக்ஷரா’ (கல்வி கற்றவர்கள்) விபரீதமாக மாறினால் ‘ராக்ஷசா’ ஆவார்கள். ‘சரச’ இயல்பு கொண்ட மனிதன்  தலைகீழாக ஆனாலும் ‘சரச’ குணம் மாறாது. (சரச என்றால் நகைச்சுவையான, மகிழ்ச்சியான மனிதன்).

விளக்கம்:

அண்மையில் பிடிபட்டுவருகின்ற பயங்கரவாதிகள், ஆயுதம் பிடித்து மனிதர்களை கொன்று குவித்து வருபவர்கள். இவர்கள் எழுத்தறிவில்லாதவர்கள் அல்ல. படித்தவர்கள்தான். படித்தவர்களை சம்ஸ்கிருதத்தில் ‘சாக்ஷரா’ என்பார்கள். இந்த சொல்லைத் திருப்பி போட்டால் ‘ராக்ஷசா’  என்றாகும் என்று சமத்காரமாக எடுத்துரைப்பது இந்த ஸ்லோகத்தின் சிறப்பு. 

படித்தவர்கள் சமுதாயப் பொறுப்போடு நடந்து கொள்ளாவிட்டால் தேசத்திற்கு தீங்கு நேரும். அவர்கள் அரக்கர்களாக மாறுவார்கள் என்று எச்சரிக்கும் ஹிதோபதேசம் இந்த சுலோகம்.

உயர்ந்த வம்சத்தில் பிறந்த ராவணன் வேதம், வேதாங்கம் படித்த கல்விமான். அவனுடைய எதிர்மறை குணத்தாலும், கற்ற கல்வியை கடைபிடிக்காமல் போனதாலும் அரக்கன் ஆனான்.

‘சரச’ என்றால் ஆனந்தமாக சிரித்து, சிரிக்க வைத்து மகிழும் மனிதன். அவன் எப்படி இருந்தாலும் அவனில் மாற்றம் இருக்காது என்பது கருத்து.

பல்கலைக்கழகங்களில் ஆய்வு செய்யும் கல்வியாளர்கள் நாட்டுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதைப் பார்க்கிறோம். பண்பாடற்ற கல்வியாளர்களால் என்ன பயன்? 
அரக்க குணம் கொண்ட நரகாசுரன், ராவணன், மகிஷாசுரன், போன்றோருக்கு அநியாயம் நேர்ந்துவிட்டது என்று புலம்பி, அவர்களுக்குத் வக்காலத்து வாங்கி விவாதம் செய்யும் விபரீத நடத்தை கொண்டவர்கள் படிக்காத முட்டாள்கள் அல்லர். இவர்கள் எல்லாம் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாக உலவி வரும் அரக்கர்களே! இந்த சுலோகத்துக்கு சரியான உதாரணம் இவர்களே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories