சுபாஷிதம்: படித்த அரக்கர்கள்!

சுபாஷிதம்… ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

99. படித்த அரக்கர்கள்!

ஸ்லோகம்:

சாக்ஷரா விபரீதாஸ்சேத் ராக்ஷசா ஏவ கேவலம் |
சரசோ விபரீதோ௨பி சரசத்வம் ந முஞ்சதி ||
– ஹிதோபதேசம்.

பொருள்:

‘சாக்ஷரா’ (கல்வி கற்றவர்கள்) விபரீதமாக மாறினால் ‘ராக்ஷசா’ ஆவார்கள். ‘சரச’ இயல்பு கொண்ட மனிதன்  தலைகீழாக ஆனாலும் ‘சரச’ குணம் மாறாது. (சரச என்றால் நகைச்சுவையான, மகிழ்ச்சியான மனிதன்).

விளக்கம்:

அண்மையில் பிடிபட்டுவருகின்ற பயங்கரவாதிகள், ஆயுதம் பிடித்து மனிதர்களை கொன்று குவித்து வருபவர்கள். இவர்கள் எழுத்தறிவில்லாதவர்கள் அல்ல. படித்தவர்கள்தான். படித்தவர்களை சம்ஸ்கிருதத்தில் ‘சாக்ஷரா’ என்பார்கள். இந்த சொல்லைத் திருப்பி போட்டால் ‘ராக்ஷசா’  என்றாகும் என்று சமத்காரமாக எடுத்துரைப்பது இந்த ஸ்லோகத்தின் சிறப்பு. 

படித்தவர்கள் சமுதாயப் பொறுப்போடு நடந்து கொள்ளாவிட்டால் தேசத்திற்கு தீங்கு நேரும். அவர்கள் அரக்கர்களாக மாறுவார்கள் என்று எச்சரிக்கும் ஹிதோபதேசம் இந்த சுலோகம்.

ALSO READ:  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

உயர்ந்த வம்சத்தில் பிறந்த ராவணன் வேதம், வேதாங்கம் படித்த கல்விமான். அவனுடைய எதிர்மறை குணத்தாலும், கற்ற கல்வியை கடைபிடிக்காமல் போனதாலும் அரக்கன் ஆனான்.

‘சரச’ என்றால் ஆனந்தமாக சிரித்து, சிரிக்க வைத்து மகிழும் மனிதன். அவன் எப்படி இருந்தாலும் அவனில் மாற்றம் இருக்காது என்பது கருத்து.

பல்கலைக்கழகங்களில் ஆய்வு செய்யும் கல்வியாளர்கள் நாட்டுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதைப் பார்க்கிறோம். பண்பாடற்ற கல்வியாளர்களால் என்ன பயன்? 
அரக்க குணம் கொண்ட நரகாசுரன், ராவணன், மகிஷாசுரன், போன்றோருக்கு அநியாயம் நேர்ந்துவிட்டது என்று புலம்பி, அவர்களுக்குத் வக்காலத்து வாங்கி விவாதம் செய்யும் விபரீத நடத்தை கொண்டவர்கள் படிக்காத முட்டாள்கள் அல்லர். இவர்கள் எல்லாம் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாக உலவி வரும் அரக்கர்களே! இந்த சுலோகத்துக்கு சரியான உதாரணம் இவர்களே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories