சுபாஷிதம்: மூடன் யார்?

Published:

subhashitam_1-5-696x392-2
subhashitam_1-5-696×392-2

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

மூடன் யார்?

ஸ்லோகம்:
1.ஸ்வமர்தம் ய: பரித்யஜ்ய பரார்தமனுதிஷ்டதி !
மித்யாசரதி மித்ரார்தே யஸ்ச மூட: ஸ உச்யதே !!

  1. சம்சாரயதி க்ருத்யானி சர்வத்ர விசிகித்ஸதே !
    சிரம் கரோதி க்ஷிப்ரார்தே ஸ மூடோ பரதர்ஷப !!
  2. அனாஹூத: ப்ரவிசதி அப்ருஷ்டோ பஹு பாஷதே !
    அவிஸ்வஸ்தே விஸ்வசிதி மூடசேதா நராதம: !!
  • மகாபாரதம்.

பொருள்:
மூடனின் குணங்களை விதுரர் இவ்வாறு விளக்குகிறார். தன் வேலையை விட்டுவிட்டு வீணாக பிறர் வேலையில் ஈடுபடுவான். நண்பனுக்கு உதவுகிறேன் என்று கூறிக் கொள்வான்.

செய்ய வேண்டிய வேலைகளை காரணமின்றி தள்ளிப் போடுவான். எப்போதும் சந்தேகப்படுபவனாக இருப்பான். விரைவில் முடிக்கக்கூடிய பணியை தாமதமாகச் செய்வான். கேட்காவிட்டாலும் அதிகப் பிரசங்கித்தனமாக பேசுவான். தன்னை நம்பாதவர்களைக் கூட நம்புவான்.

விளக்கம்
மகாபாரதத்தில் ஒரு கட்டம். இரவு உறக்கம் வராமல் திருதராஷ்டிரன் விதுரரை வரவழைத்து நல்ல வார்த்தைகள் கூறச் சொல்லி கேட்கிறான்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

அந்த குருட்டு அரசனுக்கு பல சுபாஷிதங்களை விவரித்துக் கூறுகிறார் விதுரர். அவற்றுள் அறிஞர்களின் குணநலன்களை விவரித்தபின் முட்டாள் யார் என்பது பற்றி சுமார் 15 ஸ்லோகங்களில் விவரிக்கிறார். அவற்றில் சில இவை.

இந்த தீய குணங்கள் உள்ளவன் அறிவிலி, மூடன் என்று மகாபாரதம் குறிப்பிடுகிறது. இந்த குணங்கள் நம்மில் துளி இருந்தாலும் கவனமாக கண்காணித்து அவற்றை விலக்கிக் கொள்வதே புத்திசாலிகள் செய்ய வேண்டிய பணி.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img