விநாயகர் சிலை வைப்பதன் பின்னே உள்ள புவி அறிவியல்! விருப்பம் இருந்தா தெரிஞ்சுக்கோங்க..!

panchamuka vinayakar in telangana - 2026
panchamuka vinayakar in telangana

கட்டுரை; மு ராம்குமார்

விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் வைப்பது ஏன்? அட இதுதான் காரணமா?

பிடிச்சி வச்சா பிள்ளையார் -ன்னு ஒரு சொலவடை மட்டுமல்ல, ஈரமஞ்சள் தூளை பிடித்து வைத்து, அதற்கு பிள்ளையார் எனப் பெயரிட்டு, சிற்ப சாஸ்திரங்களின்படி செய்த கல்/உலோகத் திருமேனிகளுக்கு செய்யப்படும் அனைத்து உபசாரங்களும், பூசை புனஸ்காரங்களும் செய்வதை கண்டிருப்போம். ஆனால், விநாயகர் சதுர்த்தி சமயத்தில் மட்டும் களிமண்ணால் பிள்ளையார் செய்து, அதனை மூன்று /ஐந்து / ஏழு நாட்கள் பூஜித்து, அதன் பின்னர் ஆறு / ஏரி /குளம் / கண்மாய் / கிணற்றில் விசர்ஜனம் செய்வது வழக்கம். இது ஏன் என்று யோசித்ததுண்டா?

நிலப்பரப்பில் ஒவ்வோர் இடத்திலும் வெவ்விதமான மொட்டைப் பாறைகள், பலவித நிறங்களில் மண், மணல், ஆகியவற்றைப் பார்த்திருப்போம். இவற்றில் மொட்டைப் பாறைகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பெளதிக, வேதியிய சிதைவுகளுக்குட்பட்டு, மண் உருவாகிறது. இந்த மண்ணில் இருந்து கரையக்கூடிய தனிமங்கள் கரைசல்களாகவும், சிதைவின் போதும், கரைசலாகும் போதும் ஒரு பகுதி வளிமண்டலத்தில் வாயுவாகவும், மீதமிருக்கும் கரையாப் பகுதி பலதரப்பட்ட அளவிலான துகள்களாகவும், பல வகையிலான கனிமங்களாகவும் தங்கி விடுகின்றன.

தமது தாய்பாறையின் தன்மையை ஒத்திருக்கும் இந்த மண் வகைகள், கால ஓட்டத்திலும், உருவான இடத்திலிருந்து மிகத் தொலைவுக்கு கடத்தப்படும் போதும் அவற்றின் பருமன், அளவு, தனிம , கனிம உள்ளடக்கம் வெகுவாக மாறுதல்களுக்குட்பட்டு, கடற்கரையோரமும், ஆறுகளுக்குள்ளும் சிலிகா கனிம அளவு மிக மிகுதியடைகிறது.
ஆற்று கரைகளிலும், வடிநிலத்தின் சில பகுதிகளிலும், சதுப்பு நிலங்களிலும் களிமண் எனப்படும் Clay அதிகமுள்ள, அங்கக கரிமத்துகள்கள் நிறைந்த மண் வகை படிவுறுகிறது.

ALSO READ:  பராபவ - பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

மற்ற மண் வகைகளை போலல்லாமல் நதி வடிநிலத்தில் படிவுறும் களிமண்ணுக்கு சில சிறப்பியல்புகள் உண்டு.
1.துகள்களின் அளவு மிகச் சிறியதாக இருப்பதால், பாறையிலுள்ள மிக்கதுண்ணிய இடுக்குகளிலும் சென்று படிய கூடிய தன்மையுடையது.

2 . தொடர்ந்து படியும் போது நீர் சேகரமாகும் நுண்துளைகளை அடைத்து பாறை, நிலப்பரப்பை நீர் புகாத்தன்மையுடையதாக மாற்றும். அதாவது, இவை படிந்துள்ள ஆழத்தை/பரப்பைத் தாண்டி நீர் ஆழத்திற்கோ வேறோர் இடத்திற்கோ, கடத்தப்பபட முடியாது. இதன் மூலம் இவை இருக்குமிடத்தில் நீரை சேகரம் செய்கிகின்றன.

  1. ஆனால், இவை மெல்லிய படலமாக நீர் நிலைகளில் படிந்திருக்கும் நிலையில், நீர்வரத்து அதிகரித்தால், நீரழுத்தம் அதிகமாகும் போது ஆழத்திற்கும், பிற இடங்களுக்கும் நீர் போக்கை அனுமதிக்கின்றன. அதாவது நீர் நிலையில் குறைவான நீர் இருந்தால் சேமிக்கவும், அதிகம் இருந்தால் கடத்தவும் உதவுகின்றன. இது மெல்லிய படலமாக களிமண் நீர் நிலைகளில் இருக்கும் போது மட்டுமே செயல்படும் சேப்டி வால்வு மாதிரி.
  2. பிற மண் வகைகளை விட களிமண் துகள்களுக்கு அதிக பரப்பு விசை, அதிக surface to volume ratio, அயனி விசை உண்டு. இதனால் இவை தம்மை அணுகும் அங்கக கரிமத்துதுகள்களையும், இவையிரண்டும் சேர்ந்து தமக்கு அருகே வரும் / உள்ள உலோக அயனிகளை ஈர்த்து கொள்ளும். அதாவது இயற்கையாக செயல்படும் விஷ உறிஞ்சி. தம்மோடு அவற்றை சேர்த்த பின் அயனி விசையை சமனம் செய்து விடுவதால் விஷமுறிவு செயலையும் செய்வதாக எடுத்துக் கொள்ளலாம்.
ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இப்ப, இந்த இயல்புகளோடு ஆடிப்பட்டத்துக்கு முன் தூர்வாரிய கேணி, குளம், கண்மாய், ஏரியில, அந்தந்த ஊர்காரங்க தத்தமது ஊருக்குள், அருகே உள்ள நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்வதன் அர்த்தம், பயன் என்னனவாயிருக்குமின்னு யோசிச்சிக்கவும்.

அடுத்தது, அபிஷேக திருமேனிகளின் அயனியாக்கம், அயனி விசை அளவு உயர்வு ஆகியவற்றை மந்திர உச்சாடனங்கள் அதிகப்பபடுத்துகின்றன என்ற விஷயத்தையும் இணைத்துப் பார்க்கவும்.

So, தூர்வாரலில் அதிகப்படுத்ததப்பட்ட நீர் கடத்தலை கட்டுப்படுத்தணும், அதிக நீர் வந்தா பூமிக்குள் / பிற இடங்களிலும் சேகரமாகணும், excess/deficient உலோக அயனிகளை சமனம் செய்யணும், இந்த செயல்கள் அளவுக்குட்பட்டு இருக்கணும், இதைச் செய்ய activated Clay + Organic Carbon வேணும்.
இதெல்லாலாம் சொன்னா கேப்பமா?
எல்லாத்தையும் சாமி பேர்ல செய்யச் சொல்லு. பயபுள்ளங்க மரியாதையாச் செய்வாங்க.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories