வளைந்து செல்லும் அழகு ரயில்! செங்கோட்டை – கொல்லம் மலைப் பாதை!

thenmalai rail - 2026

செங்கோட்டை என்றால் நினைவுக்கு வருவது குற்றாலம். குற்றாலம் என்றால் நினைவுக்கு வருவது குளியல். அதற்கு மேல் கும்மாளம் என நிறைய இருக்கலாம்.

ஆனால் எனக்கு செங்கோட்டை என்றதும் நினைவுக்கு வந்தது செங்கோட்டையில் இருந்து தென்மலை, புனலூர் வழியாக கொல்லம் செல்லும் ரயில்தான். இந்த ரயிலில் பலர் பயணித்திருக்கலாம். ஆனால் அதில் பயணம் செய்யாதவர்களுக்காக இந்த வீடியோ பதிவு.

114 வருடங்களுக்கு முன்பு அதாவது 1904-ம் ஆண்டு மீட்டர் கேஜ் (Meter gauge) பாதையில் தொடங்கப்பட்டு ஓடிக்கொண்டிருந்த இந்த ரயில் போக்குவரத்து கடந்த 2007-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது.

பின்னர் செங்கோட்டையில் இருந்து புனலூர் வரை அகல ரயில் (Broad gauge) பாதை அமைக்கும் பணி நடைபெற்று தற்போது 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டில் தான் ரயில் போக்குவரத்து தொடங்கியது. (2010-ம் ஆண்டிலேயே கொல்லத்திலிருந்து புனலூர் வரை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டுவிட்டது).

மலைகளுக்கு நடுவே ரயில் பாதை உள்ளதால் செங்கோட்டை-தென்மலை- புனலூர் வழியாக கொல்லம் செல்லும் ரயில்கள் வளைந்து, நெளிந்து செல்கிறது. பல இடங்களில் கும்மிருட்டாக காட்சியளிக்கும் குகைகளுக்குள் ரயில் நுழைந்து செல்கிறது. அந்த குகைகளுக்குள் இருட்டாக இருப்பதால் Solar Lights பொருத்தப்பட்டுள்ளது.

ரயிலின் என்ஜின் பகுதி மேற்கு திசையை பார்த்த மாதிரி சென்று கொண்டிருந்தால் அதே ரயிலின் கடைசி பெட்டி தெற்கு திசையை பார்த்தபடி செல்வதை காணலாம். இப்படி S வடிவத்தில் ரயில் பாதை இருப்பதால் ரயில் மெதுவாக செல்கிறது. இதனால் அடிக்கடி பிரேக் சத்தம் கீச், கீச் என கேட்டுக் கொண்டே இருக்கும்.

செங்கோட்டையில் இருந்து கொல்லத்துக்கு சுமார் 3.30 மணி நேரம் பயணம் என்றால் அதில் 2 மணி நேரம் மிகவும் குறைந்த வேகத்தில்தான் செல்கிறது.

வண்டி…வண்டி ரயிலு வண்டி என ஒரு சினிமா பாடல் வருமே… அந்த பாடல் காட்சியில் வரும் 16 கண் பாலம் இந்த ரயில் பாதையில் தான் உள்ளது. அந்த பாடல் காட்சி எடுக்கும் போது Meter gauge பாதையாக இருந்துள்ளது. தற்போது இந்த பாலம் அகலப்படுத்தப்பட்டுள்ளது.

பசுமை நிறைந்த சோலைகளுக்குள் இந்த ரயிலில் செல்லும் போது ஆங்காங்கே விண்ணை தொடுவது போல் காட்சியளிக்கும் மலைகள், அந்த மலைகளை தொட்டு செல்லும் மேகங்கள், ஆங்காங்கே கொட்டும் அருவிகள் என பார்ப்போரின் பயணத்தை பரவசப்படுத்தும்.

செங்கோட்டை-புனலூர்-கொல்லம் மார்க்க ரயில்களின் வீடியோவை YouTube-ல் நிறைய காணலாம். ஆனால் கொட்டும் மழையில் ஓடும் ரயிலையும், ஓடும் ரயிலில் இருந்து கொட்டும் மழையையும் பார்த்திருக்க முடியாது. அந்த காட்சிகளை இந்த வீடியோவில் காணலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

Topics

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

பஞ்சாங்கம் மார்ச் 10 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories