அதிமுக., உறுப்பினர் எண்ணிக்கை விரைவில் 2 கோடியை எட்டும்!

சென்னை: அதிமுக., மொத்த உறுப்பினர்கள் 1 கோடியே 10 லட்சத்து 41 ஆயிரத்து 600 உறுப்பினர்கள் என்றும், விரைவில் இரண்டு கோடியைத் தாண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார்.

மறைந்த தமிழக முதல்வரும் அதிமுக., பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதா இருந்தபோது, அ.தி.மு.க. உறுப்பினர்கள் எண்ணிக்கை 1.5 கோடியாக உயர்ந்தது. தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சிக்கும் இல்லாத வகையில் 1.5 கோடி உறுப்பினர்களுடன் அ.தி.மு.க. தனிப்பெரும் கட்சியாக தனித்துவத்துடன் செயல்பட்டு வந்தது.

அவரின் மறைவிற்கு பின்பு அதிமுக கழக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக கே.எடப்பாடி பழனிசாமி பதவி வகித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு இருவரும் இணைந்து, அ.தி.மு.க உறுப்பினர் சேர்க்கையை தொடங்கினார்கள். அ.தி.மு.க. உறுப்பினர்கள் தங்களது அட்டைகளை புதுப்பித்துக் கொள்ள விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நடைபெற்ற பணிகளின் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக., தலைமையகத்தில் புதிய உறுப்பினர்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை, ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் , கழக அவை தலைவர் மதுசூதனன் ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது.

தொடர்ந்து அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் பேசியபோது,  ஒன்றரை கோடிக்கும் அதிகமான மாபெரும் தொண்டர்கள் இயக்கத்தை உருவாக்கியவர் ஜெயலலிதா! தற்போது தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்று செயல்பட்டு வருகின்றனர். எனவே இரட்டை குழல் துப்பாக்கியாக கழக இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் மற்றும் கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஸ் ஆகியோர் இந்த இயக்கத்தை காத்துவருகின்றனர் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories