சீனாவுக்கு எதிராக ஹாங்காங்கில் தொடரும் கலவரம்! அரசு சார் விளம்பர பிரசாரத்தை துண்டித்துள்ள டிவிட்டர் பேஸ்புக்!

Security Hong Kong - 2026

ஹாங்காங்கில் ஏற்பட்டுள்ள கலவரத்தைக் கட்டுப்படுத்த சிறப்புப் பயிற்சி பெற்ற 10 ஆயிரம் பேர் கொண்ட துணை ராணுவப் படையை களமிறக்க சீனா முடிவு செய்துள்ளது.

ஹாங்காங்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சீனாவிற்கு அழைத்துச் சென்று விசாரிக்கும் முறைக்கு எதிராக கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து கடந்த ஒரு மாத காலத்திற்கும் அதிகமாக அங்கு வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில் ஹாங்காங் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு 10 ஆயிரம் பேர் அடங்கிய துணை ராணுவப்படையை ஹாங்காங் எல்லைப் பகுதியான ஷென்ஷன் (Shenzhen) என்ற இடத்தில் நிறுத்தியுள்ளது. இந்நிலையில் கலவரத் தடுப்பு ஒத்திகையில் துணை ராணுவப் படையினர் ஈடுபடும் வீடியோவையும் சீனா வெளியிட்டுள்ளது.

Hong Kong Inline2 - 2026
One of the tweets Twitter identified as having originated from China.

இந்நிலையில், டிவிட்டர் திங்களன்று “சீன அரசு கட்டுப்பாட்டில் உள்ள செய்தி ஊடக நிறுவனங்களின்” விளம்பரங்களை இனி ஏற்கப்போவதில்லை என்று அறிவித்தது!

பேஸ்புக்கோடு சேர்ந்து, டிவிட்டரும் சீனாவிலிருந்து நடத்தப்படும் ரகசிய அரசு ஆதரவு சமூக ஊடக பிரச்சாரத்தை அறிந்து கொண்டு, அவற்றை நீக்குவதாகக் கூறியுள்ளது. ஹாங்காங்கில் நடந்துகொண்டிருக்கும் ஆர்ப்பாட்டங்களை இழித்துப் பேசி அவற்றை தவறாக சித்திரிக்க முயன்றதாக இரு சமூக ஊடகங்களும் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

“ஆரோக்கியமான கருத்துரையாடல் மற்றும் வெளிப்படையான உரையாடலை நாங்கள் பாதுகாக்க விரும்புகிறோம்” என்று ட்விட்டர் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டிவிட்டரின் புதிய கொள்கைப்படி, “விளம்பர ரீதியாக அணுகும் அல்லது அரசு சார் கருத்துக்களால் இயங்கும், அரசால் கட்டுப்படுத்தப்படும் செய்தி ஊடக நிறுவனங்களுக்கு” மட்டுமே இந்த விளம்பர கருத்துகள் ஏற்கப் படாதது பொருந்தும் என்று நிறுவனம் கூறியுள்ளது. ஃப்ரீலான்ஸர்கள், பொது ஊடகங்கள் உட்பட வரி செலுத்துவோர் விளம்பர நிதியளிக்கும் நிறுவனங்கள் இந்தப் புதிய விதியில் இல்லை என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது.

ட்விட்டர் தனது அறிக்கையில் எந்த சீன நிறுவனத்தின் பெயரையும் வெளியிடவில்லை. ஆனால் 900 க்கும் மேற்பட்ட அரசு சார் கணக்குகளை அடையாளம் கண்டுள்ளது.

டிவிட்டர் இது குறித்து கூறுகையில், “வேண்டுமென்றே குறிப்பாக ஹாங்காங்கில் அரசியல் முரண்பாடுகளை விதைக்க சீன அரசு முயல்கிறது, இதில் எதிர்ப்பு இயக்கத்தின் நியாயத் தன்மையையும் அரசியல் நிலைகளையும் குறை மதிப்பிற்கு உட்படுத்துகிறது.”

அரசு சார்பில் இயங்கும் சில டிவிட்டர் கணக்குகள், ஹாங்காங் எதிர்ப்பாளர்களை “கரப்பான் பூச்சிகள்” என்று குறிப்பிடுகின்றன! அவர்களை ஐஎஸ்ஐஎஸ்., பயங்கரவாதிகளாக சித்திரித்துள்ளன. இவ்வாறு ஹாங்காங் போராட்டக்காரர்களைப் புண்படுத்தும் கணக்குகள் அனைத்தும் ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கிலிருந்து அகற்றப்பட்டுள்ளன.

Hong Kong Inline1 - 2026
One of the Facebook posts Facebook believes originated from China.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories