மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மைகேல் க்ளார்க் இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியுடன் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். நீண்ட நாட்களாக ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி வரும் க்ளார்க் நாளை நடைபெறும் இறுதிப் போட்டி குறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது, வெற்றியுடன் தான் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பை வெளியிட்டார். இதனால் நாளைய போட்டி அவருக்கு உணர்ச்சிகரமான போட்டியாக இருக்கும். தொடர்ந்து காயத்தால் அவதிப்பட்டு வரும் மைக்கேல் க்ளார்க், முதுகு வலியுடன் நீண்டநாள் போராடி வருகிறார். இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டித் தொடரிலும் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அந்தத் தொடரில் இருந்து விலகிய அவர் அடுத்து நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடரிலும் பங்கேற்கவில்லை. பின்னர் உடல் தகுதியை நிரூபித்து, உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றார்.
இந்த உலகக் கோப்பையுடன் ஓய்வு: ஆஸ்திரேலிய கேப்டன் க்ளார்க்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari