பாரீஸ்: அண்மையில் விபத்துக்கு உள்ளான ஜெர்மன்விங்ஸ் விமானத்தை அந்தத் துணை விமானி வேண்டுமென்றே விபத்துக்குள்ளாக்கவில்லை என்றும், அவருக்கு பார்வைக் கோளாறு இருந்துள்ளதால், இது ஒரு விபத்தாகவே இருக்கக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தத் துணை விமானி பார்வைக் கோளாறால் அவதிப்பட்டு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துணை விமானி ஆன்ட்ரியஸ் லுபிட்ஸ்(28) வீட்டில் சோதனை நடத்தியபோது அவருக்கு இருந்த பிரச்னை இருந்துள்ளது தெரிய வந்தது. லுபிட்ஸுக்கு கண் நோய் இருந்த விஷயத்தை அவர் ஜெர்மன்விங்ஸ் நிறுவனத்திற்கு தெரிவிக்காமல் ரகசியமாக வைத்துள்ளார். அந்த நோய்க்காக அவர் டுசல்டார்ப் நகரில் உள்ள யுனிக்லினிக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால், இந்த விமான விபத்து குறித்து குழப்பமான நிலையே நீடிக்கிறது.
விபத்துக்குள்ளான ஜெர்மன் விமானி பார்வைக் கோளாறால் அவதிப்பட்டாரா?
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

