ஆஸ்திரேலிய வீரர் ஓய்வு! ரசிகர்கள் அதிர்ச்சி!

- 2026

மன அழுத்தம் காரணமாக தற்போது நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலிருந்து பிரபல ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் விலகியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணி டி20 தொடரை வென்றது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி, 134 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

3-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் வெள்ளியன்று மெல்போர்னில் நடைபெறவுள்ளது. முதல் டி20 ஆட்டத்தில் 28 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார் மேக்ஸ்வெல். 2-வது டி20 ஆட்டத்தில் பேட்டிங் செய்ய அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் மன அழுத்தம் காரணமாக தற்போது நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலிருந்து மேக்ஸ்வெல் விலகியுள்ளார். சிறிது காலம் கிரிக்கெட்டிலிருந்து விலகி தனது மனநலப் பிரச்னையை அவர் சரிசெய்யவுள்ளார். இந்தத் தகவலை ஆஸி. அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
மேக்ஸ்வெல்லின் நிலவரம் குறித்து லாங்கர் கூறியதாவது:

மேக்ஸ்வெல்லால் தற்போது கிரிக்கெட் ஆட்டத்தை ரசித்து விளையாட முடியவில்லை. அடிலெய்டில் சிறப்பாக விளையாடினார். அட்டகாசமாக ஃபீல்டிங் செய்தார். எனினும் அவர் அதை ரசித்து செய்தார் என நான் நினைக்கவில்லை. விளையாடும்போது அவர் முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டாலும் அவர் சந்தோஷமாக விளையாடவில்லை.

ALSO READ:  ஐபிஎல் 2026: அதிரடி ரன் குவிப்பின் ஆட்டக்களமானது!

அடுத்தச் சில நாள்களில் மெல்போர்னில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும். காயங்களைக் கவனிப்பது போல அவர் எந்த நிலைமையில் உள்ளார், சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் எப்போது மீண்டும் விளையாடவுள்ளார் என அலசுவோம். விளையாடும்போது அவருடைய பிரச்னை தெரியாவிட்டாலும் முகத்திரையின் உள்ளே என்ன நடக்கிறது என்பதை உங்களால் அறிந்துகொள்ள முடியும்.

மனிதர்களுடன் நட்புறவை வளர்த்துக்கொள்ளும்போது அவர்கள் எப்போது சரியாக இல்லை என்பதைக் கண்டுபிடித்து விட முடியும். அடிலெய்ட் ஆட்டத்துக்கு முன்பு அவரிடம் இது பற்றி விசாரித்தேன். அப்போதுதான் சிறிது பேசவேண்டும் என்றார் என மேக்ஸ்வெல்லின் நிலை குறித்து லாங்கர் தெரிவித்துள்ளார்.

கிளென் மேக்ஸ்வெல், தனது பிரச்னையிலிருந்து மீண்டு வர முழு ஒத்துழைப்பு அளிப்போம் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் கழகம் கூறியுள்ளது. இந்நிலையில் மேக்ஸ்வெல்லுக்குப் பதிலாக டார்சி ஷார்ட் ஆஸ்திரேலிய டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ALSO READ:  ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories