ஆஸ்திரேலிய வீரர் ஓய்வு! ரசிகர்கள் அதிர்ச்சி!

- 2026

மன அழுத்தம் காரணமாக தற்போது நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலிருந்து பிரபல ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் விலகியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணி டி20 தொடரை வென்றது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி, 134 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

3-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் வெள்ளியன்று மெல்போர்னில் நடைபெறவுள்ளது. முதல் டி20 ஆட்டத்தில் 28 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார் மேக்ஸ்வெல். 2-வது டி20 ஆட்டத்தில் பேட்டிங் செய்ய அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் மன அழுத்தம் காரணமாக தற்போது நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலிருந்து மேக்ஸ்வெல் விலகியுள்ளார். சிறிது காலம் கிரிக்கெட்டிலிருந்து விலகி தனது மனநலப் பிரச்னையை அவர் சரிசெய்யவுள்ளார். இந்தத் தகவலை ஆஸி. அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
மேக்ஸ்வெல்லின் நிலவரம் குறித்து லாங்கர் கூறியதாவது:

மேக்ஸ்வெல்லால் தற்போது கிரிக்கெட் ஆட்டத்தை ரசித்து விளையாட முடியவில்லை. அடிலெய்டில் சிறப்பாக விளையாடினார். அட்டகாசமாக ஃபீல்டிங் செய்தார். எனினும் அவர் அதை ரசித்து செய்தார் என நான் நினைக்கவில்லை. விளையாடும்போது அவர் முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டாலும் அவர் சந்தோஷமாக விளையாடவில்லை.

அடுத்தச் சில நாள்களில் மெல்போர்னில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும். காயங்களைக் கவனிப்பது போல அவர் எந்த நிலைமையில் உள்ளார், சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் எப்போது மீண்டும் விளையாடவுள்ளார் என அலசுவோம். விளையாடும்போது அவருடைய பிரச்னை தெரியாவிட்டாலும் முகத்திரையின் உள்ளே என்ன நடக்கிறது என்பதை உங்களால் அறிந்துகொள்ள முடியும்.

மனிதர்களுடன் நட்புறவை வளர்த்துக்கொள்ளும்போது அவர்கள் எப்போது சரியாக இல்லை என்பதைக் கண்டுபிடித்து விட முடியும். அடிலெய்ட் ஆட்டத்துக்கு முன்பு அவரிடம் இது பற்றி விசாரித்தேன். அப்போதுதான் சிறிது பேசவேண்டும் என்றார் என மேக்ஸ்வெல்லின் நிலை குறித்து லாங்கர் தெரிவித்துள்ளார்.

கிளென் மேக்ஸ்வெல், தனது பிரச்னையிலிருந்து மீண்டு வர முழு ஒத்துழைப்பு அளிப்போம் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் கழகம் கூறியுள்ளது. இந்நிலையில் மேக்ஸ்வெல்லுக்குப் பதிலாக டார்சி ஷார்ட் ஆஸ்திரேலிய டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Topics

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Entertainment News

Popular Categories