சிட்னி: கடந்த 2014ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த ஜி 20 மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டபோது, பிரதமர் மோடி உள்ளிட்ட 31 தலைவர்களின் தனிப்பட்ட தகவல்கள் வெளியே கசிந்துள்ளன. இதற்கு தவறாக அனுப்பப் பட்ட இமெயில் காரணமாகியுள்ளது. 2014 நவம்பரில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் ஜி20 மாநாடு நடைபெற்றது. அதில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, ரஷ்ய அதிபர் புதின், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், சீன அதிபர் ஜி ஜின்பிங், ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன் உள்ளிட் 31 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது, மாநாட்டில் கலந்து கொண்ட 31 தலைவர்களின் பிறந்த தேதி, பதவியின் பெயர், பாஸ்போர்ட் எண், விசா விவரம் மற்றும் சில தனிப்பட்ட விவரங்கள் அடங்கிய ரகசியக் கோப்பினை ஆஸ்திரேலிய குடியேற்றத் துறை ஊழியர் ஒருவர் தவறுதலாக ஆசியக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்துபவர்களில் ஒருவருக்கு இமெயிலில் அனுப்பியுள்ளார். இமெயிலைப் பெற்றவர் இது தனக்கு தவறுதலாக அனுப்ப பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டியபிறகே அவருக்கு தனது தவறு புரிந்தது. இவ்வாறு தகவல் கசிந்த விவரம் குறித்து சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு தெரிவிக்க வேண்டாம் என குடியேற்றத் துறை அதிகாரி ஒருவர் கேட்டுக் கொண்டபடி, அப்போது நடந்த சம்பவம் குறித்து அந்தத் தலைவர்களுக்கு தெரிவிக்கப்படவில்லையாம்.
தவறாக அனுப்பப்பட்ட மெயில்: மோடி உள்பட 31 தலைவர்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிவு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari