December 5, 2025, 6:13 PM
26.7 C
Chennai

ஈரானுடன் வர்த்தகம்: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

10 June28 US warns India - 2025சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் அடுத்த சில ஆண்டுகளில் அமெரிக்காவை சீனா விஞ்சி விடும் என்பது, உலக வங்கி, பன்னாட்டு நிதியம் போன்ற அமைப்புகளின் கணிப்பு.சீனாவுடன் போட்டிப்போட்டுக்கொண்டு, இந்தியாவும் வளர்ச்சி கண்டு, ஆசிய பிராந்தியத்தில் இருபெரும் வல்லரசுகளாக உருவெடுத்து வருகின்றன. இது, தற்போது முதல் இடத்திலுள்ள அமெரிக்காவுக்கு கலக்கத்தை ஏற்படுத்த, அந்நாடு மறைமுக வர்த்தகப்போரை திணிக்கும் நடவடிக்கைளில் இறங்கியுள்ளது என்றே சொல்லலாம்.

1,300 சீனப் பொருட்களுக்கு திடீரென 25 சதவீத அதிக வரி என அறிவித்த அமெரிக்கா அடுத்ததாக, தங்கள் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியப் பொருட்கள் மீதும் அதிரடியாக வரிகளை விதித்தது. இதனால் அதிர்ச்சி போன ஐரோப்பிய நாடுகளும், இந்தியாவும், சீனாவும் தங்கள் பங்கிற்கு அமெரிக்காவின் பொருட்கள் மீது வரிகளை வாரி வீசத் தொடங்கி உள்ளன. எந்நாட்டுடனும் வர்த்தக போரை திணிக்கவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வந்தாலும், சர்வதேச வணிகத்தில் பிற நாடுகளின் வர்த்தகங்களை, அமெரிக்கா முடக்கும் செயலாகவே, இது பார்க்கப்படுகிறது.

தற்போது, ஈரானை தனிமைப்படுத்துவதாகக் கூறி, அந்நாட்டிடமிருந்து, எந்த ஒரு நாடும் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யக்கூடாது என புதிதாக ஒரு மிரட்டலை விடுத்திருக்கிறது அமெரிக்கா. நவம்பர் மாதத்திற்குள் ஈரானிடம் இருந்து இறக்குமதியை முற்றிலுமாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில், அந்நாடுகள் மீது பொருளாதார தடைகள் பாயும் என்றும் எச்சரித்திருக்கிறது.

நம் நாட்டில் கச்சா எண்ணெய்யின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த சூழலில், 125 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா, இதனை எப்படி எதிர்க்கொள்ளப்போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. ஈராக், சவுதி அரேபியாவை தொடர்ந்து, கச்சா எண்ணெய் தேவையில் ஈரானையே இந்தியா பெரிதும் நம்பியிருக்கிறது. ஏற்கனவே பெட்ரோலிய பொருட்களின் விலை இந்தியாவில் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ள வேளையில், ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு டிரம்ப் அரசு முட்டுக்கட்டை போடுவது, புஷ், ஓபாமா போன்ற முன்னாள் அதிபர்கள் வளர்த்தெடுத்த இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்படுத்தும் என்பது வெளியுறவுத்துறை நிபுணர்களின் கருத்தாகவே உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories