ஆபரேஷனின் போது… தீப்பிடித்து கேன்சர் நோயாளி மரணம்!

operation cancer patient - 2026

ஆப்ரேஷன் நடக்கும்போது நெருப்பு பிடித்து கன்சர் நோயாளி மரணம் அடைந்துள்ளார். அதிர்ச்சிகரமான இந்த விபத்து, ருமேனியாவில் உள்ள புசாரெஸ்டில் ப்ளோரெஸ்கே மருத்துவமனையில் நடந்தது.

66 வயது பெண்மணி கணைய புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவர்கள் முடிவெடுத்தனர்.

டிசம்பர் 22ஆம் தேதி ஆபரேஷனுக்கு முன் பாக்டீரியா நுண்ணுயிர்களை அழிப்பதற்காக மருத்துவர்கள் அந்த பெண்மணிக்கு ஒரு டிசின்பெக்டன்ட் ஸ்பிரே அளித்தார்கள். அதில் ஆல்கஹால் அளவு அதிகமாக இருந்ததால் ஒரு மின்சார உபகரணம் அவர் மேல் பட்டதும் உடலில் நெருப்பு பிடித்துக் கொண்டது. 40% நெருப்பு காயத்தால் உடல் எரிந்து போனது. சிகிச்சை பலனின்றி ஒரு வாரத்தில் நோயாளி இறந்து போனார்.

operation cancer patient1 - 2026

அவர் மரணம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கினர்.

“ஆப்ரேஷன் தியேட்டரில் என்ன நடந்தது என்றோ அதன் விபரீதம் என்ன என்றோ எங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்பட வில்லை. அது ஒரு விபத்து என்று மட்டுமே கூறினார்கள்” என்று மரணம் அடைந்தவரின் குடும்பத்தார் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

“மீடியா மூலமாகவே எங்களுக்கு சில விவரங்கள் தெரிய வந்தன. யார் மீதும் தவறு கண்டு பிடிப்பதற்காக அல்ல….. என்ன நடந்தது என்று எங்களுக்கும் தெரிய வேண்டுமல்லவா?” என்றனர்.

இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப் போவதாக ருமேனியா மருத்துவத் துறை அமைச்சர் விக்டர் கோஸ்டாசே தெரிவித்தார்.

மின்சார உபகரணங்களைக் கொண்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது ஆல்கஹால் உள்ள டிசின்பெக்டன்ட் பயன்படுத்தக்கூடாது என்ற விஷயம் டாக்டர்களுக்கு முன்பே தெரிந்திருக்க வேண்டும் என்று இணை அமைச்சர் ஹோராதியு மோல்டோவன் கூறினார்.

யுரோப்பியன் யூனியன் நாடுகளோடு ஒப்பிட்டால் மருத்துவத் துறையில் ருமேனியா பிற நாடுகளை விட குறைந்த அளவு தொகையை செலவழிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories