ரமலான் மாதத்திலும்… மெக்கா மசூதிகளில் தொழுகைக்கு தடை!

mecca 1 - 2026

கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் பரவல் அச்சம் காரணாக புனித ரமலான் மாதத்திலும் மெக்காவில் உள்ள இரு புகழ் பெற்ற புனித மசூதிகளில் தொழுகை நடத்த தடை நீடிப்பதாக சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டினர் மட்டுமன்றி சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர்களும், உம்ரா புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு தடை விதித்து சவுதி அரேபி அரசு உத்தரவிட்டது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள 6 வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்கள் மெக்காவிலும் மதீனாவிலும் புனிதப் பயணம் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்தியாவில் இருந்து மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஹஜ் புனிதப் பயணம் செல்வதற்குத் தயாராக இருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சவுதி அரேபியில் இதுவரை கரோனாவுக்கு 103 பேர் உயிரிழந்துள்ளனர், 10,484 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சவுதி அரேபியாவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், ரமலான் மாதத்தில் புனித மசூதிகள் திறக்கப்படுமா என்ற சந்தேகம் இருந்தது. அதற்கு ஏற்றார்போல் சவுதி அரேபி மதகுரு ஷேக் அப்துல்லா அல் ஷேக் மக்களுக்கு விடுத்த செய்தியில் புனித ரமலான் மாதத்தில் மக்கள் யாரும் மசூதிக்கு வர வேண்டாம். வீ்ட்டிலேயே தொழுகயை மேற்கொள்ளலாம். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என வேண்டுகோள் விடுத்தார்

இந்த நிலையில் வரும் 24ஆம் தேதி ரமலான் மாதம் தொடங்குவதால் மெக்காவில்உள்ள பெரிய மசூதி, இறைத்தூதர் மசூதி ஆகியவற்றில் மக்கள் தொழுகை நடத்த அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கூறப் பட்டது. அதற்கு ஏற்ப, மெக்காவில் உள்ள இரு புனித மசூதிகளின் தலைவர் ஷேக் டாக்டர் அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஜிஸ் அல் சுதாயிஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ள கருத்தில் “ மெக்காவில் உள்ள மிகப்பெரிய மசூதி ( மஜ்ஜித் அல் ஹரம்), இறைத்தூதர் மசூதி (அல் மஜ்ஜித் அல் நபாவி)ஆகியவற்றில் ரமலான் மாதத்திலும் தொழுகைக்கு மக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். மக்களை தொழுகைக்கு அழைப்பது நேரடியாக ஒளிபரப்பப் படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories