அமெரிக்கா: கொரோனா ஆய்வில் ஈடுபட்ட பேராசிரியர் சுட்டுக் கொலை!

china

கொரோனா நோய்த்தொற்று குறித்த ஆய்வில் ஈடுபட்டு வந்த பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சி உதவி பேராசிரியர் டாக்டர் பிங் லியூ(37) மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் சீனாவைச் சேர்ந்தவர்.

இதுதொடர்பாக காவல்துறையினர் தெரிவித்தாவது:
பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சி உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் டாக்டர் பிங் லியூ, வார இறுதி நாளான சனிக்கிழமை பிற்பகலில் ரோஸ் டவுன்ஷிப்பில் உள்ள அவரது வீட்டில் தனியாக இருந்த போது, ஹாவோ கு(46) என அடையாளம் காணப்பட்ட நபர், வீட்டின் திறந்திருந்த கதவு வழியாக நுழைந்து லியூ மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், லியூ தலை, கழுத்து மற்றும் உடற்பகுதியில் குண்டுகள் பாய்ந்து காயங்களுடன் இறந்தார்.

கொரோனா தொற்று பரவல் தொடர்பான மிக முக்கியமான ஆய்வில் ஈடுபட்டு வந்த லியூ, ஆய்வு முடிவுகள் முடியும் தருவாயில் இருந்த நிலையில், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

லியூவை சுட்டுக்கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர் தனது கார் நிறுத்தப்பட்டிருந்த சார்லமேன் பகுதிக்கு திரும்பி வந்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டதாகவும், இருவரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என நம்புவதாகவும், ஆனால், லியூ சீனாவைச் சேர்ந்தவர் என்பதால் அவர் மீது குறி வைக்கப்பட்டு கொல்லப்பட்டதாக கூறுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் லியூவின் வீட்டில் இருந்து எந்த தடயங்களும் கைப்பற்றப்படவில்லை, இந்த சம்பவத்தால் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

ALSO READ:  தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் அவரது மனைவி வீட்டில் இல்லை என்றும் தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை.

சீனாவைப் பூர்வீகமாகக் கொண்ட லியூ, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் இளங்கலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர். பின்னர் பிட்ஸ்பர்க்கில் உள்ள புகழ்பெற்ற கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டார்.

லியூ கணக்கீட்டு மற்றும் கணினி உயிரியல் துறையில் ஆராய்ச்சி உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர், ஆராய்ச்சி துறையில் பலரின் மரியாதையையும் பாராட்டையும் பெற்றவர், மேலும் அறிவியலுக்கு தனித்துவமான பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒரு சிறந்த ஆராய்ச்சியாளராகவும் இளைஞர்களால் நன்கு மதிக்கப்படும் வழிகாட்டியாகவும் புகழப் பெற்றவர்.

டாக்டர் பிங் லியூ கொரோனா தொற்று மற்றும் செல்லுலார் வழிமுறைகளை நன்கு புரிந்துகொள்வதற்கான ஆய்வில் ஈடுபட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories