April 19, 2025, 5:10 AM
29.2 C
Chennai

அமெரிக்கா: கொரோனா ஆய்வில் ஈடுபட்ட பேராசிரியர் சுட்டுக் கொலை!

china

கொரோனா நோய்த்தொற்று குறித்த ஆய்வில் ஈடுபட்டு வந்த பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சி உதவி பேராசிரியர் டாக்டர் பிங் லியூ(37) மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் சீனாவைச் சேர்ந்தவர்.

இதுதொடர்பாக காவல்துறையினர் தெரிவித்தாவது:
பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சி உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் டாக்டர் பிங் லியூ, வார இறுதி நாளான சனிக்கிழமை பிற்பகலில் ரோஸ் டவுன்ஷிப்பில் உள்ள அவரது வீட்டில் தனியாக இருந்த போது, ஹாவோ கு(46) என அடையாளம் காணப்பட்ட நபர், வீட்டின் திறந்திருந்த கதவு வழியாக நுழைந்து லியூ மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், லியூ தலை, கழுத்து மற்றும் உடற்பகுதியில் குண்டுகள் பாய்ந்து காயங்களுடன் இறந்தார்.

கொரோனா தொற்று பரவல் தொடர்பான மிக முக்கியமான ஆய்வில் ஈடுபட்டு வந்த லியூ, ஆய்வு முடிவுகள் முடியும் தருவாயில் இருந்த நிலையில், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

லியூவை சுட்டுக்கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர் தனது கார் நிறுத்தப்பட்டிருந்த சார்லமேன் பகுதிக்கு திரும்பி வந்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டதாகவும், இருவரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என நம்புவதாகவும், ஆனால், லியூ சீனாவைச் சேர்ந்தவர் என்பதால் அவர் மீது குறி வைக்கப்பட்டு கொல்லப்பட்டதாக கூறுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் லியூவின் வீட்டில் இருந்து எந்த தடயங்களும் கைப்பற்றப்படவில்லை, இந்த சம்பவத்தால் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

ALSO READ:  தென்காசி கோயில் கும்பாபிஷேகம் நடத்த இடைக்காலத் தடை!

துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் அவரது மனைவி வீட்டில் இல்லை என்றும் தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை.

சீனாவைப் பூர்வீகமாகக் கொண்ட லியூ, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் இளங்கலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர். பின்னர் பிட்ஸ்பர்க்கில் உள்ள புகழ்பெற்ற கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டார்.

லியூ கணக்கீட்டு மற்றும் கணினி உயிரியல் துறையில் ஆராய்ச்சி உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர், ஆராய்ச்சி துறையில் பலரின் மரியாதையையும் பாராட்டையும் பெற்றவர், மேலும் அறிவியலுக்கு தனித்துவமான பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒரு சிறந்த ஆராய்ச்சியாளராகவும் இளைஞர்களால் நன்கு மதிக்கப்படும் வழிகாட்டியாகவும் புகழப் பெற்றவர்.

டாக்டர் பிங் லியூ கொரோனா தொற்று மற்றும் செல்லுலார் வழிமுறைகளை நன்கு புரிந்துகொள்வதற்கான ஆய்வில் ஈடுபட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்.19 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

Topics

பஞ்சாங்கம் ஏப்.19 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: தூள் கிளப்பிய பஞ்சாப் அணி

ந்த ஆண்டு ஐபிஎல் பேட்ஸ்மென்களின் சொர்க்கமாக விளங்குகிறது. 150 ரன்னுக்கும் குறைவான ஆட்டங்கள் வெகு சிலவாக உள்ளன. மட்டையாளர்கள் பந்துவீச்சாளர்களை வெளுவெளு என்று வெளுக்கிறார்கள்.

மு.க. ஸ்டாலினுக்கு மாநில சுயாட்சி ஜுரம்!

முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு மீண்டும் மாநில சுயாட்சி ஜுரம் பிடித்திருக்கிறது. திமுக தலைவர்களின் உள்ளே இருக்கும் வேறு கோளாறின் அறிகுறியாக அவர்களுக்கு அவ்வப்போது மாநில சுயாட்சி ஜுரம் வரும்.

Entertainment News

Popular Categories