December 6, 2025, 3:35 PM
29.4 C
Chennai

பைக்கை இடித்து விட்டு சென்ற ட்ரக்! ட்ரக் கில் தொங்கியபடியே பயணித்த இளைஞர்!

track2 - 2025

பிரேசில் அரங்கேறிய கொடூர சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் ஓர் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. அ

திக வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கும் டிரக்கின் பக்கவாட்டு (கதவு) பகுதியில் இளைஞர் ஒருவர் தொங்கியபடிச் செல்லும் அக்காட்சியே, தற்போது வாகன ஓட்டிகளை உறைய வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

ட்ரக்கின் முன்பகுதியில், பாதியளவு நுழைந்தபடி இழுத்து செல்லப்பட்ட பைக்கின் காட்சிகளும் அவ்வீடியோவில் இடம் பெற்றிருக்கின்றன. இதனைப் பார்த்த பலரும் இப்படியும் சம்பவங்கள் நடைபெறுமா, என அதிர்ச்சியில் முற்றிலுமாக உறைந்திருக்கின்றனர்.

track 1 - 2025

நிதானமின்றி சாலையில் டிரக்கை இயக்கி வந்த அந்த டிரைவர் முன்னதாக பைக்கின்மீது மோதியிருக்கின்றார். இதையடுத்தே, ட்ரக்கின் பக்கவாட்டு பகுதியில் உயிரை பணயம் வைத்து தொங்கியபடி இளைஞர் பயணித்திருக்கின்றார்.

விபத்தை ஏற்படுத்திவிட்டு ட்ரக்கை நிறுத்தாமல் சென்றதன் காரணத்தினாலயே இந்த விபரீத செயலில் இளைஞர் களமிறங்கியதாகக் கூறப்படுகின்றது.

track1 - 2025

இதுமட்டுமின்றி, ட்ரக் மோதியதன் காரணத்தினால் இளைஞருடன் பயணித்த அவரது மனைவி பலத்த காயங்களினால் சம்பவ இடத்திலேயே இறந்திருக்கிறார். இந்த கொடூர நிகழ்வின் காரணத்தினாலேயே ட்ரக் நிறுத்தாதபோதும் விடாப்பிடியாக அந்த இளைஞர் தொங்கியபடி பயணித்திருக்கின்றார்.

அவ்வாறு தொங்கியபடியே சுமார் 30 கி.மீட்டருக்கும் அதிகமான தூரம் வரை ட்ரக்கில் தொங்கியபடி இளைஞர் பயணித்ததாகக் கூறப்படுகின்றது.

track3 - 2025

மேலும், சம்பவத்தின்போது ட்ரக்கின் டிரைவர் ஆக்ரோஷமாகவும், மிகவும் முரட்டுத் தனமாகவும் நடந்துக் கொண்டதாக ட்ரக்கை நிறுத்த முயன்ற மற்ற வாகன ஓட்டிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இருப்பினும், விடாப்பிடியாக விரட்டிச் சென்ற வாகன ஓட்டிகள் ஒரு வழியாக ட்ரக் டிரைவரை மடக்கி இளைஞரை மீட்டிருக்கின்றனர். தொடர்ந்து, அடாவடி தனத்தில் ஈடுபட்ட ட்ரக் ஓட்டுனரையும் போலீஸிடத்தில் பிடித்து கொடுத்திருக்கின்றனர்.

bike 1 1 - 2025

பிரேசில் நாட்டில் உள்ள சான்டா கேடரினா (Santa Catarina) எனும் பகுதியிலேயே நெஞ்சை உறைய வைக்கக் கூடிய இச்சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. ட்ரக் டிரைவர் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களைப் பயன்படுத்தியிருந்ததாக அந்நாட்டு போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.

இதை உறுதிப்படுத்தும் வகையில் சில போதைப் பொருட்களைப் போலீஸார் ட்ரக்கில் இருந்து பறிமுதல் செய்திருக்கின்றனர்.

track4 1 - 2025

முன்னதாக, இளைஞர் ஆபத்தான நிலையில் இருப்பதைக் உணர்ந்த பிற வாகன ஓட்டிகள் ட்ரக்கை பல முறை எச்சரித்திருக்கின்றனர். ஆனால், அவர்களையும் அச்சுறுத்தும் வகையில் அந்த டிரைவர் நடந்துக் கொண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உள்ளூர் வாசிகள் ஊடகங்களிடத்தில் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த நிலையிலேயே பெரும் விடா முயற்சியின் அடிப்படையில் இளைஞர் பிற வாகன ஓட்டிகள் பத்திரமாக மீட்டெடுத்திருக்கின்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories