அதிர்ச்சி! காவலதிகாரி வீட்டு பின்புறம் தோண்ட தோண்ட வந்த சடலங்கள்!

dead body 1
dead body 1

மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடார் நாட்டில், முன்னாள் போலீஸ் அதிகாரி வீட்டில் தோண்ட தோண்ட பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமெரிக்காவில் இருக்கும் குட்டி நாடு எல் சால்வடார். இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்கள்தொகையே வெறும் 64.5 லட்சம் தான். ஆனாலும், பெரும்பாலான லத்தீன் அமெரிக்க நாடுகளைப் போலவே இங்கும் வன்முறை அதிகம்.

குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான வன்முறை இந்த நாட்டில் உச்சத்தில் உள்ளது.

இந்நிலையில், முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவர் வீட்டில் சுமார் 20க்கும் மேற்பட்ட பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

dead body
dead body

எல் சால்வடோர் நாட்டின் தலைநகர் சான் சால்வடோரில் இருந்து சுமார் 78 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சாவேஸ் சான்ச்சுவாபா நகரம். இப்பகுதியில் வசித்து வந்தவர் ஹியூகோ எர்னஸ்டோ ஒசாரியோ.

முன்னாள் போலீஸ் அதிகாரியான இவர்,கடந்த சில வாரங்களுக்கு முன், தாய்-மகள் என இருவரைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். இவர் மீது மேலும் சில பாலியல் வழக்குகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அவர்கள் காணாமல் போன இடத்தில் கண்டறியப்பட்ட டிஎன்ஏ மாதிரிகள், ஹியூகோ எர்னஸ்டோ ஒசாரியோவுடன் டிஎன்ஏ மாதிரிகளுடன் ஒத்துப்போனதால் போலீசார் தங்கள் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

dead body 2
dead body 2

அப்போது இருவரையும் கொலை செய்ததை அந்த முன்னாள் போலீஸ் அதிகாரி ஒப்புக்கொண்டார். மேலும், அவர்களின் உடலைத் தனது வீட்டின் பின்புறம் புதைத்துள்ளதாகவும் அவர் வாக்குமூலம் அளித்தார். அவர்கள் காணாமல் போன இடத்தில் கண்டறியப்பட்ட டிஎன்ஏ மாதிரிகள், ஹியூகோ எர்னஸ்டோ ஒசாரியோவுடன் டிஎன்ஏ மாதிரிகளுடன் ஒத்துப்போனதால் போலீசார் தங்கள் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

இதையடுத்து போலீசார் அவரது வீட்டின் பின்புறத்தில் சோதனை மேற்கொண்டனர். அங்குத் தோண்டியபோது, பல பெண்கள் மற்றும் குழந்தைகளின் சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள், குழந்தைகள் உட்பட குறைந்தது எட்டு பேரின் சடலங்களை மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் சுமார் 24 பேரின் உடல் உறுப்புகளும் அங்குக் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது எல் சால்வடார் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மொத்தம் ஒன்பது பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கண்டெடுக்கப்பட்ட சடலங்களில் சில சடலங்கள் 2 ஆண்டுகளுக்கு முன் புதைக்கப்பட்டவை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளில் மாயமான பலரது குடும்பத்தினரும் அந்த வீட்டின் அருகே குவிந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories