பாலியல் தொல்லை: பெண் அதிகாரி தற்கொலை.. விமானப்படை தளபதி இராஜினாமா!

South Korea
South Korea

பெண் அதிகாரி தற்கொலை விவகாரத்தில் தென்கொரிய விமானப்படை தளபதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் தென்கொரிய விமானப்படையில் மூத்த அதிகாரியாக பணிபுரிந்து வந்த பெண் ஒருவர் தன்னுடன் பணிபுரிந்த சக ஆண் அதிகாரி ஒருவருடன் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அதன் பின் காரில் திரும்பி சென்று கொண்டிருந்தபோது அந்த பெண்ணை ஆண் அதிகாரி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அந்த பெண் தனது மேலதிகாரியிடம் கூறியபோது அவர் அந்த சம்பவத்தை மூடி மறைக்க முயற்சி செய்ததோடு, அந்த அதிகாரியிடம் சமரசம் செய்து கொள்ளுமாறு கூறியதால் மனவேதனை அடைந்த அந்த பெண் சென்ற மாதம் இறுதியில் தற்கொலை செய்து கொண்டதால் இந்த விவகாரம் வெடிக்க ஆரம்பித்துள்ளது.

இதையடுத்து 3 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆண் அதிகாரி மற்றும் அதனை மறைக்க முயற்சி செய்த மேலதிகாரி குறித்து கையெழுத்திடப்பட்ட புகார் ஒன்று அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆண் அதிகாரியை நேற்று முன்தினம் ராணுவம் கைது செய்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் அதிபர் மூன் ஜே இன், ராணுவத்துக்கு இந்த விவகாரத்தில் விமானப்படை மேற்கொண்ட நடவடிக்கை குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டது.

ALSO READ:  சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

இந்த நிலையில் பெண் அதிகாரியின் இந்த தற்கொலை விவகாரத்தில் அவருடைய மரணத்திற்கு விமானப்படையின் தளபதி லீ சியோங் யோங் முழு பொறுப்பு ஏற்பதாகக் கூறி தனது பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார்.

இதையடுத்து அதிபர் மூன் ஜே இன் அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories