பாலியல் தொல்லை: பெண் அதிகாரி தற்கொலை.. விமானப்படை தளபதி இராஜினாமா!

South Korea
South Korea

பெண் அதிகாரி தற்கொலை விவகாரத்தில் தென்கொரிய விமானப்படை தளபதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் தென்கொரிய விமானப்படையில் மூத்த அதிகாரியாக பணிபுரிந்து வந்த பெண் ஒருவர் தன்னுடன் பணிபுரிந்த சக ஆண் அதிகாரி ஒருவருடன் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அதன் பின் காரில் திரும்பி சென்று கொண்டிருந்தபோது அந்த பெண்ணை ஆண் அதிகாரி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அந்த பெண் தனது மேலதிகாரியிடம் கூறியபோது அவர் அந்த சம்பவத்தை மூடி மறைக்க முயற்சி செய்ததோடு, அந்த அதிகாரியிடம் சமரசம் செய்து கொள்ளுமாறு கூறியதால் மனவேதனை அடைந்த அந்த பெண் சென்ற மாதம் இறுதியில் தற்கொலை செய்து கொண்டதால் இந்த விவகாரம் வெடிக்க ஆரம்பித்துள்ளது.

இதையடுத்து 3 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆண் அதிகாரி மற்றும் அதனை மறைக்க முயற்சி செய்த மேலதிகாரி குறித்து கையெழுத்திடப்பட்ட புகார் ஒன்று அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆண் அதிகாரியை நேற்று முன்தினம் ராணுவம் கைது செய்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் அதிபர் மூன் ஜே இன், ராணுவத்துக்கு இந்த விவகாரத்தில் விமானப்படை மேற்கொண்ட நடவடிக்கை குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டது.

இந்த நிலையில் பெண் அதிகாரியின் இந்த தற்கொலை விவகாரத்தில் அவருடைய மரணத்திற்கு விமானப்படையின் தளபதி லீ சியோங் யோங் முழு பொறுப்பு ஏற்பதாகக் கூறி தனது பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார்.

இதையடுத்து அதிபர் மூன் ஜே இன் அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories