April 28, 2025, 8:11 AM
28.9 C
Chennai

பாலியல் தொல்லை: பெண் அதிகாரி தற்கொலை.. விமானப்படை தளபதி இராஜினாமா!

South Korea
South Korea

பெண் அதிகாரி தற்கொலை விவகாரத்தில் தென்கொரிய விமானப்படை தளபதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் தென்கொரிய விமானப்படையில் மூத்த அதிகாரியாக பணிபுரிந்து வந்த பெண் ஒருவர் தன்னுடன் பணிபுரிந்த சக ஆண் அதிகாரி ஒருவருடன் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அதன் பின் காரில் திரும்பி சென்று கொண்டிருந்தபோது அந்த பெண்ணை ஆண் அதிகாரி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அந்த பெண் தனது மேலதிகாரியிடம் கூறியபோது அவர் அந்த சம்பவத்தை மூடி மறைக்க முயற்சி செய்ததோடு, அந்த அதிகாரியிடம் சமரசம் செய்து கொள்ளுமாறு கூறியதால் மனவேதனை அடைந்த அந்த பெண் சென்ற மாதம் இறுதியில் தற்கொலை செய்து கொண்டதால் இந்த விவகாரம் வெடிக்க ஆரம்பித்துள்ளது.

இதையடுத்து 3 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆண் அதிகாரி மற்றும் அதனை மறைக்க முயற்சி செய்த மேலதிகாரி குறித்து கையெழுத்திடப்பட்ட புகார் ஒன்று அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆண் அதிகாரியை நேற்று முன்தினம் ராணுவம் கைது செய்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் அதிபர் மூன் ஜே இன், ராணுவத்துக்கு இந்த விவகாரத்தில் விமானப்படை மேற்கொண்ட நடவடிக்கை குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டது.

ALSO READ:  IPL 2024: அதிரடி காட்டிய சாய் சுதர்ஷன்

இந்த நிலையில் பெண் அதிகாரியின் இந்த தற்கொலை விவகாரத்தில் அவருடைய மரணத்திற்கு விமானப்படையின் தளபதி லீ சியோங் யோங் முழு பொறுப்பு ஏற்பதாகக் கூறி தனது பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார்.

இதையடுத்து அதிபர் மூன் ஜே இன் அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Entertainment News

Popular Categories