வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த தாய்! துப்பாக்கியால் சுட்ட குழந்தை!

baby 2
baby 2

கவனக்குறைவால் உயிர்கள் போவதை கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், அமெரிக்காவில் நடைபெற்ற இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

தனது குழந்தையை விளையாட விட்ட தாய், வீடியோவில் பேசிக் கொண்டிருந்தார். வேலை தொடர்பாக அவர் வீடியோ அழைப்பில் மும்முரமாக இருந்தார்.

அப்போது, தளிர்நடை பயிலும் குழந்தைக்கு குண்டுகள் நிரம்பிய கைத்துப்பாக்கியை எடுத்து தாயை சுட்டு விட்டது. வீடியோ வேலை அழைப்பில் இருந்த 21 வயது தாயின் தலையில் குண்டு பாய்ந்தது.

அடுக்குமாடி குடியிருப்பின் உள்ளே நடைபெற்ற இந்த சம்பவம் அனைவரையும் உலுக்கிவிட்டது. தாயை சுட்ட குழந்தை, அவர் கீழே விழுந்த பிறகும் துப்பாக்கியை கையில் வைத்திருந்தது.

இறந்து விழுந்த பெண்ணுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தவர் நேரலையாக இந்த சம்பவத்தைக் கண்டு அதிர்ந்துபோனாலும், உடனே சுதாரித்துக் கொண்டு 911 என்ற அவசர உதவி எண்ணை அழைத்து விஷயத்தை சொல்லிட்டார்.

புளோரிடாவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. வேலை தொடர்பான வீடியோ அழைப்பில் இருந்த அவளது தாயை, குழந்தை சுட்டுக் கொன்றதாக மத்திய போலீசார் தெரிவித்தனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதோடு, பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது.

ஷமயா லின் என அடையாளம் காணப்பட்ட அந்த 21 வயதான பெண், தலையில் குண்டு பாய்ந்ததும் பின்புறமாக விழுந்துவிட்டார். அதன்பிறகு அவர் வீடியோ அழைப்புக்கு திரும்பவில்லை என்று, அந்த பெண்ணுடன் வீடியோவில் பேசிக் கொண்டிருந்த நபர் தெரிவித்தார்.

“அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் படுகாயமடைந்த பெண்ணுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்தனர், ஆனால் அவர் தலையில் பாய்ந்த குண்டு உயிரை பறித்துவிட்டது” என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுமா என்பதும் தெரியவில்லை. இதுதொடர்பான சட்ட விஷயங்களை வழக்கறிஞர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

தனி மனிதர்கள் துப்பாக்கி சூடு நடத்துவதும், இதில் அப்பாவி மக்கள் பலியாவதும் தொடர் கதையாகி வருகிறது என்பது கவலையளித்த நிலையில், தற்போது ஒன்றுமே தெரியாத குழந்தையின் கையில் அசல் துப்பாக்கி கிடைத்ததால் ஏற்பட்ட விபரீதம் அனைவரையும் பதறச் செய்திருக்கிறது.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

துப்பாக்கி வைத்திருப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க அதிபர் ஜோபைடன் உத்தரவிட்டுள்ள போதிலும் துப்பாக்கி சூடு சம்பங்கள் குறைந்தபாடில்லை.

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை கலாசாரம் நாளுக்கு நாள் விசுவரூபம் எடுத்து வருகிறது. இந்த கலாசாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கடுமையான சட்டம் இயற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், துப்பாக்கி வன்முறையை தடுப்பதற்காக முதற்கட்டமாக சட்ட விரோத கடத்தல் துப்பாக்கி வர்த்தகத்தை ஒடுக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திட்டமிட்டுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக அமெரிக்க அதிபர் 5 பணிக்குழுக்களை அமைத்துள்ளார். இந்த குழுக்கள், துப்பாக்கிச்சூடு மற்றும் பிற வன்முறைகளில் பயன்படுத்தப்படும் சட்டவிரோத கடத்தல் துப்பாக்கி விநியோகத்தை தடுப்பதில் முக்கிய பங்காற்றும்.

இவை, நியூயார்க், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், சான்பிரான்சிஸ்கோ, வாஷிங்டன் ஆகிய இடங்களில் துப்பாக்கி கடத்தலில் தீவிர கவனம் செலுத்தும் என்றும் அந்நாட்டு சட்டத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Entertainment News

Popular Categories