வீடு வாங்கினால் மனைவி இலவசம்: இந்தோனேஷியாவில் விநோத விளம்பரம்

indonesia-advt-house-free-wife இந்தோனேசியாவில் வீடு வாங்குபவருக்கு மனைவி இலவசம் என்ற விநோத விளம்பரம் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. வீடு வாங்குபவர்களுக்கு ரியல் எஸ்டேட் நடத்தும் நிறுவனங்கள் பரிசுப் பொருட்கள் வழங்குவது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் விநோதமாக மனைவி இலவசம் என்ற பெயரில் விளம்பரம் இந்தோனேஷியாவில் வெளியாகியுள்ளது. “இது ஒரு அரிய வாய்ப்பு. நீங்கள் இந்த வீட்டை வாங்கினால், இந்த வீட்டின் உரிமையாளரை நீங்கள் திருமணம் செய்து கொள்ள கேட்கலாம். ” என இந்த விளம்பரம் வெளியாகி, இப்போது இணையத்தில் மிகப் பிரபலமடைந்துள்ளது. இந்த விளம்பரத்தில், 40 வயது மதிக்கத்தக்க வீட்டு பெண் உரிமையாளரான லீனா காரில் சாய்ந்தபடி இருக்கும் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா தீவில் பல்வேறு வசதிகளுடன் இந்த வீடு உள்ளது. இரண்டு படுக்கை அறை, இரு குளியல் அறை, வாகனம் நிறுத்துமிடம் மற்றும் சிறிய மீன்குளம் ஆகிய வசதிகள் வீட்டில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. விளம்பரத்தில் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது. ஜாவா தீவில் உள்ள இந்த வீட்டின் மார்க்கெட் விலை 999 மில்லியன் ரூபயா (75 ஆயிரம் அமெரிக்க டாலர்கள்) என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வீட்டை விற்பனை செய்தாலும், தொடர்ந்து உரிமையாளராக நீடிக்கவே லீனா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று இணையதள தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான செய்திகள் வெளியானதும், லீனாவை அணுகிய செய்தியாளர்கள், அவரிடம் இது குறித்துக் கேட்டனர். இதனால் லீனாவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுதொடர்பாக போலீசாரும் விசாரித்து உள்ளனர். போலீஸாரிடம் இது என் யோசனை அல்ல என்று விவரித்தேன் என்றார் லீனா. இரண்டு குழந்தைகளுக்குத் தாயான லீனா பேசுகையில், வீட்டை விற்பனை செய்ய ஆட்களை கண்டுபிடிக்கவே என் நண்பரிடம் உதவி கேட்டேன். கணவர் தொடர்பாகவும் பேசினேன். குறிப்பிட்ட நபர்களிடம் இந்தத் தகவலை அவர் தெரிவிப்பார் என்றே அவரிடம் கூறினேன். இணையதளங்களில் பதிவு செய்யச் சொல்லவில்லை. வீடு வாங்க விருப்பம் உள்ளவர் திருமணம் ஆகாதவர், மனைவியை இழந்தவர், மனைவியைத் தேடுபவர் என்ற பிரிவில் இருந்தால் எனக்குத் தெரியப் படுத்துங்கள் என்றே நான் அவரிடம் கேட்டுக் கொண்டேன். நானும் விதவை என்பதால் என்னை அவர் அறிந்து கொள்ள முடியும் என்பதால் அப்படிக் கூறினேன் என்று தெரிவித்துள்ளார். இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில் இதுபோன்ற விளம்பரம் வெளியாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Topics

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Entertainment News

Popular Categories